சிவராத்திரி


 

 


Click Here
ஓம் நமசிவாய….ஓம் நமசிவாய… ஓம் நமசிவாய…

14:56:46

Tuesday

2012-01-25

சிவராத்திரி வழிபாடு ஏற்படக் காரணமாக பல கதைகள் கூறப்படுகின்றன.

படைக்கும் கடவுளான நான்முகனுக்கும், காக்கும் கடவுளான திருமாலுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. இப்பிரச்னையை தீர்த்து வைக்க பிறவாயாக்கைப் பெரியோனாம் சிவபெருமானிடம் வேண்டினர். உடன் சிவனும் தன் அடி முடியினைக் கண்டு முதலில் வருபவரே பெரியவர் என்றார். இருவரும் சம்மதித்து விரைந்தனர். அப்போது சிவபெருமான் லிங்கோத்பவராய் எழுந்தருளி அடிமுடிகாண ஒண்ணாப் பேரொளியாய் நின்றார். அது கண்ட தேவர்கள் எல்லாம் ஒன்று கூடி சிவபெருமானை வழிபட்டனர். இந்நிகழ்ச்சியே பிற்காலத்தில் சிவராத்திரியாகக் கொண்டாடப்பட்டது என்கிறது ஒரு புராணக்கதை.

சக்தி, விளையாட்டாக சிவமூர்த்தியின் மூன்று கண்களையும் தம் கைகளால் மூட, மூவுலகமும் இருண்டன. அந்த நேரத்தில் சிவமூர்த்தியை தேவர்கள் வேண்டி வணங்கி நின்றனர். இதுவே சிவராத்திரி ஆயிற்று என்பது மற்றொரு கதை.

அசுரர்களும், தேவர்களும் இணைந்து பாற்கடலைக் கடைந்தபோது ஆலகால விஷம் தோன்றியது. அவ்விஷம் மற்ற உயிர்களைப் பாதிக்காமல் இருப்பதற்காக சிவபெருமான் தானே அதை அருந்தினார். அவ்விஷம் சிவனைப் பீடிக்காதிருக்க உமையானவள் சிவனின் கண்டம் பற்ற, அவ்விஷம் கண்டத்தில் தங்கிற்று. கண்டத்தில் தங்கிய விஷத்தால் சிவபெருமான் ‘நீலகண்டன்’ என்றழைக்கப்பட்டார். கண்டத்து விஷம் சிவனை பாதிக்காதிருக்க தேவர்கள் அனைவரும் இரவு முழுவதும் பூஜை செய்தனர். அவர்கள் பூஜித்த நிகழ்ச்சியே சிவராத்திரி என்றழைக்கப்பட்டது என்பது இன்னொரு கதை.

ஒரு கல்பத்தில் அண்டங்களெல்லாம் இருளாகிப்போக அவ்விருளைப் போக்க ருத்திரர் சிவலிங்கத்தை இடைவிடாது பூசித்தார். அவர் அவ்வாறு பூசித்த காலமே சிவராத்திரியாகக் கொண்டாடப்படுகின்றது என்றும் சொல்லப்படுகிறது.

ஒருமுறை காட்டில் ஒரு வேடன் உணவிற்காக வேட்டையாடச் சென்றபோது வேட்டை விலங்குகள் ஒன்றும் கிடைக்காமல் காட்டில் வெகுதூரம் சென்றுவிட, இரவில் வழி தெரியாது சோர்ந்தபோது வெம்புலி ஒன்று அவனை துரத்தியது. வேடன் தன் உயிரைக் காத்துக்கொள்ள ஒரு மரத்தின் மேலேறினான். மரத்தின் அடியில் புலி அமர்ந்துகொண்டது. இரவில் தான் உறங்காமலிருக்கும் பொருட்டு அம்மரத்தின் இலைகளை ஒவ்வொன்றாய் பறித்துக் கீழே போட்டுக் கொண்டிருந்தான் வேடன். விடிந்தபோது புலியைக் காணவில்லை. வேடன் பறித்து போட்ட இலைகள் குவிந்த இடத்தில் சிவலிங்கம் ஒன்றிருந்தது. இவை வில்வ இலைகளாக இருந்தன. இவ்வாறு ஓர் இரவு முழுவதும் அவன் ‘சிவ பூஜை’யில் ஈடுபட்ட அந்தச் சம்பவமே, சிவராத்திரி என்றும் பரவலாக சொல்லப்படுகிறது.

கதைகள் எப்படியிருந்தாலும் சிவராத்திரி நடத்தப்பட வேண்டிய காலத்தை ஒன்றாகவே நிர்ணயித்தனர். மாசி மாதத்தில் வருகின்ற கிருஷ்ணபட்சத்துப் பதினான்காம் நாள் இரவு சதுர்த்தசி திதியின் பதினான்காம் நாழிகை, லிங்கோத்பவ காலம் என அழைக்கப்படுகின்றது. இதுவே மகா சிவராத்திரி புண்ணிய காலம் என்பர். இதே கிருஷ்ண பட்சத்தில் (பவுர்ணமிக்கு அடுத்த) திரயோதசியில் 30 நாழிகைக்கு சதுர்த்தசி வருமாயின் அது உத்தம சிவராத்திரி என்றழைக்கப்படும். அவ்வாறு திரயோதசியில் இல்லாமல் சதுர்த்தசியில் வந்தால் அது அதம சிவராத்திரி என்றழைக்கப்படும். அன்றைய இரவில் அமாவாசை வருமானால் அது பரியாய சிவராத்திரி என்றழைக்கப்படும். பதின்மூன்றாம் நாள் ஏற்படும் மகா சிவராத்திரி, சிவனுக்குத் தேகமாகவும் பதினான்காம் நாள் தேகியாகவும் கொள்ளப்படுகின்றது.

இவ்வாறு அமைவது சிவசக்தி உருவமாக குறிப்பிடப்படுகிறது.சிவராத்திரி தினத்தன்று நான்கு ஜாமங்களிலும் ஆத்மார்த்தமாகச் சிவனை வழிபட வேண்டும். அன்றைய தினம் தானங்கள் பல செய்ய வேண்டும் என்பார்கள். இப்பூசைகளை முறையாகச் செய்பவர்கள் நான்கு யுகங்களிலும் விநாயக மூர்த்திக்கும் கந்த மூர்த்திக்கும் பிரம்மா, விஷ்ணு தெய்வங்களுக்கு இணையாகக் கருதப்படுவர் என்கின்றன புராணங்கள். இப்பூசைகளை நியதிப்படி செய்வோர் இம்மையில் பல்வகைச் செல்வங்களும், மறுமையில் சுவர்க்க போகமும் அடைவர் என்பது நம்பிக்கை.
சிவராத்திரி வழிபாடு தற்காலத்தில் கூட்டு வழிபாடாகவும், தனி வழிபாடாகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

சிவபூசை மேற்கொள்பவர்கள் மட்டுமே தனி வழிபாட்டில் ஈடுபடுகின்றனர். இவர்கள் பூஜை அறையில் சிவலிங்கத்தை வைத்து ஒவ்வொரு ஜாமத்திற்கும் ஒரு நைவேத்தியத்தையும் படைத்துச் சிவ மந்திரங்களைக் கூறி வழிபாடு செய்கின்றனர். ஒவ்வொரு ஜாமத்திலும் குளித்துவிட்டு உடை மாற்றித் திருநீறு பூசி பூஜைக்கு அமர்கின்றனர். பெரும்பாலும் பூஜை செய்பவர்கள், தாமே ஒவ்வொரு ஜாமத்திற்கும் வேண்டிய பிரசாதங்களை தயாரித்துக் கொள்வதும் உண்டு. சில இடங்களில் மட்டும் பெண்கள் அதே தூய்மையைக் கடைபிடித்துப் பிரசாதங்களை தயாரித்துக் கொடுக்கின்றனர். இரவு விழித்திருந்து தாமும் அந்த பூஜையில் கலந்து கொள்கின்றனர்.

சிவ பக்தர்கள் கோயில்களில் கூடி கூட்டாக வழிபடுவதும் உண்டு. அப்போது பூஜையில் கலந்துகொண்டு சிவனை நினைத்து இரவு முழுவதும் விழித்திருப்பதும், வழிபடுவதும் வழக்கம். சில கோயில்களில் பக்தர்கள் விழித்திருப்பதற்கு ஏதுவாகப் புராணச் சொற்பொழிவுகளை நிகழ்த்துவதும் உண்டு.

சிவராத்திரியை ஒரு கோயிலில் இருந்து வழிபடாமல் ஒவ்வொரு ஜாமத்திற்கும் ஒரு சிவன் கோயில் என்று சென்று வழிபடும் வழக்கம் சில இடங்களில் உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இவ்வழக்கம் சற்று வித்தியாசமாக அமைந்துள்ளது. ஒரே இரவில் 12 சிவன் கோயிலுக்கு ஓடிச்சென்று வழிபடுவதை இன்றளவும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். 70 கிலோ மீட்டர் சுற்றும் இவ்வழிபாட்டை இம்மாவட்டத்து இளைஞர்கள் சிறப்பாகச் செய்து வருகின்றனர். ஓடிச்சென்றே சிவாலயங்களை தரிசிப்பதால் இந்நிகழ்ச்சிக்குச் ‘சிவாலய ஓட்டம்’  என்று பெயர்.

மேலும் இச்சிவராத்திரி ஓட்டத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் ‘கோவிந்தா, கோபாலா’ என்று திருமாலின் பெயர்களைக் கூறிக்கொண்டே ஓடுகின்றனர். இவ்வாறு கூறுவதற்கான புராணக் கதை ஒன்றையும் கூறுகின்றனர்: பஞ்சபாண்டவர்கள் தங்கள் வனவாசத்தின்போது யாகம் நடத்தத் திட்டமிட்டனர். இதற்கு வலிமை மிக்க புருஷா மிருகத்தின் பால் தேவையாய் இருந்தது. புருஷா மிருகம் என்பது ஒரு விசித்திரமான உருவம் ஆகும். இடுப்பிற்கு மேல் மனித உருவமும், கீழே புலியின் வடிவமும் கொண்டது. சிவசக்தி மிக்க இப்புருஷா மிருகம் வைணவத்தை அறவே வெறுத்தது. அதன் எல்லையில் திருமாலின் நாமத்தை எழுப்பினால் எழுப்பியவரை அது வெறிகொண்டு தாக்கும். அதே வேளையில் அது நியாயத்திற்குக் கட்டுப்பட்டதாகவும் இருந்தது. தனது எல்லையை தாண்டியவர்களை அது விட்டு விடும்.

புருஷா மிருகத்தின் பாலைக் கறந்து வர தானே தகுதியானவன் என பீமன் கூறினான். பீமனது செருக்கை அடக்கவும், புருஷா மிருகத்திற்கு ‘அரியும், சிவனும் ஒன்று’ எனும் உண்மையை உணர்த்தவும் கண்ணன் எண்ணினான். பீமனே உன் வலிமையினை விடப் பலமடங்கு வலிமை மிக்கது புருஷாமிருகம். பாலைக் கறக்க முயற்சிக்கும்போது அது உன்னைப் பிடித்துவிட்டால் அங்கே ஒரு சிவலிங்கத்தை வைத்துவிடு எனக்கூறி பன்னிரு சிவலிங்கங்களை கொடுத்தார். அதனைப் பெற்றுக்கொண்ட பீமன் புருஷா மிருகத்தைக் காணப் புறப்பட்டான்.

சிவநாமத்தை உச்சரித்துக்கொண்டிருந்த புருஷா மிருகத்தைக் கண்ட பீமன் அதனருகே சென்று ‘கோவிந்தா, கோபாலா’ என்று கூற, புருஷா மிருகம் கோபமடைந்து பீமனை எட்டிப் பிடித்துக்கொண்டது. அதன் பிடியில் அகப்பட்டுக் கொண்ட பீமன் அதன் வலிமையை உணர்ந்துகொண்டான். தன்னைக் காத்துக் கொள்ள கண்ணன் கொடுத்த சிவலிங்கம் ஒன்றைக் கீழே வைக்கவும் பீமனை விட்டுவிட்டு மீண்டும் சிவநாமத்தைச் சொல்லத் தொடங்கிவிட்டது. அதனிடமிருந்து மீண்ட பீமன் சற்றே இளைப்பாறி விட்டு மீண்டும் அதனிடம் பாலைக் கறக்க முயற்சித்தான். புருஷா மிருகம் மீண்டும் அவனைப் பிடிக்க முற்பட்டது. அப்போது பீமன் மேலும் ஒரு சிவலிங்கத்தை வைத்தான். இப்படியாக வைக்கப்பட்ட பன்னிரு லிங்கங்களும் பன்னிரு சிவாலயங்களாக இப்போது திகழ்கின்றன. கடைசி சிவாலயமான ‘நட்டாலத்தில்’ தான் புருஷா மிருகத்திற்கு ‘அரியும், சிவனும் ஒன்று’ எனும் தத்துவத்தை விளக்க இறைவன் ‘சங்கர நாராயணராகக் காட்சியளித்தார் என்று கூறப்படுகிறது.

சிவாலய ஓட்டம் குறித்து மற்றொரு கதையும் கூறப்படுகிறது. அது பஸ்மாசுரன் என்ற அசுரன் சிவனை நோக்கி தவம் மேற்கொண்டான். அதற்கிறங்கிய சிவனிடம் ஒரு வரம் கேட்டான். தான்  யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் பஸ்பமாகிவிட வேண்டும் என்றான். ‘தந்தேன்’ என்ற சிவனின் தலை மீதே  கை வைத்துச் சோதிக்க எண்ணினான். அடி முடி காணா அண்ணலாய் சோதியாய் நின்ற இறைவன் தலை மீது தாம் கொண்ட வரத்தைச் சோதிக்க எண்ணிய அசுரனின் நிலையறிந்து அவனிடமிருந்து பயந்து ஓடுவது போன்ற பாவனையாக ஓடித் தங்கிய பன்னிரண்டு இடங்களே இச்சிவாலயங்கள் என்கின்றனர்.

அவ்வாறு துரத்தி வந்த அசுரனின் செயல் கண்ட திருமால் மோகினி உருக்கொண்டு அசுரன் முன்னால் வந்து நின்றார். அவள் அழகில் மயங்கி அசுரன் தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டினான். உடனிசைவதுபோல மோகினியும் தன்னைத் தவிர வேறு பெண்ணைக் கண்டுகொண்டும் பாராதிருப்பேன் எனத் தலையில் அடித்து சத்தியம் செய்துதர வேண்டினாள். அவ்வாறே சத்தியம் செய்ய முற்பட்ட அசுரன் தன் தலை மீது கை வைத்து சத்தியம் செய்ய அவனே பஸ்மமானான். இதனால் அவ்வசுரன் பஸ்மாசுரன் (அ) பத்மாசுரன் என்றழைக்கப்பட்டான் என்பது ஒரு புராணக்கதை.

சிவபெருமான் ஓடிக் களைத்துத் தங்கிய பன்னிரு இடங்களுக்கும் ஓடியே வழிபடுவது இச்சிவாலய ஓட்டம் என்றும் மக்கள் கூறுவர். அவ்வாறு ஓடும் பக்தர்கள் தாங்கள் கொண்டு செல்லும் பனை ஓலை விசிறியால் இறைவனின் களைப்பினைப் போக்க விசிறி விடுகின்றனர்.

இச்சிவாலய ஓட்டத்தினின்று மாறுபட்டது திருநெல்வேலி மற்றும் விருதுநகர் மாவட்டத்துள் அடங்கும் பஞ்ச பூதத் தலங்களின் வழிபாடாகும். சிவராத்திரியன்று இரவு முழுவதும் நடந்து சென்றே இப்பஞ்ச பூதத் தலங்களை வழிபட்டு வருகின்றனர். தற்போது சிலர் வாகனங்களில் பஞ்ச பூதத் தல வழிபாட்டைச் செய்து வருகின்றனர்.

ஒரே இரவில் பஞ்ச பூதத் தலங்களையும் வழிபட வேண்டும் என்பது மரபாகும். இம்மரபு மருத்துவ ரீதியாக மிகுந்த பயனை அளிப்பதாகவும் கூறப்படுகின்றது. ஐம்பூதங்களாகிய நமது உடல் ஒரே இரவில் சீர்படுத்தப்படுகின்றது. ஐம்பூதங்களின் இயக்கமும் உடலில் ஒழுங்காக அமைந்தால்தான் நோயினின்று உடலைப் பாதுகாக்க இயலும். எனவே ஐம்பூத வழிபாட்டால் ஐம்பூதங்களின் இயக்கமும் சீர்படுத்தப்படுகின்றது என்பது மருத்துவர்களின் கணிப்பாகும்.

சிவராத்திரி நாளைத் தவிர ஐம்பூதத்தின் இயக்கத்தைச் சீர் செய்வதற்காக இறை வழிபாட்டோடு தொடர்புபடுத்திச் சில மருத்துவர்கள் தம் வைத்திய முறையைக் கூறுகின்றனர். நம் உடலில் அப்பூதத்தின் ஆதிக்கம் குறைவுபட்டோ அன்றிக் கூடி நிற்கின்றபோதோ அந்தந்த பூதத்திற்கு உரிய சிவத்தலத்திற்குச் சென்று வழிபாடு மேற்கொண்டால் அதன் இயக்கம் சீராகும் என்ற கருத்தைத் தெரிவிக்கின்றனர். எடுத்துக்காட்டாக வாயுக் கோளாறு உள்ளவர்கள் வாயுத்தலமாகிய தென்மலைச் சிவன் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தால் அந்நோய் போக்கலாம். இதுபோன்ற ஒவ்வொரு பூதத்தின் இயக்கமும் சரிவர நடைபெறும்.

தற்போது சிவராத்திரி வழிபாட்டில் அதிகமானவர்கள் ஈடுபடுகின்றனர். ஆனால் சிவராத்திரியன்று கண் விழித்திருக்க வேண்டும் என்பதே முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. கண் விழிப்பதற்கான முயற்சியினை பலர் பலவிதமாகச் செய்து வருகின்றனர். பெண்கள் தாயக்கட்டம், சோழியாடுதல் போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டு விழித்திருக்கின்றனர். ஆண்களோ சீட்டு விளையாடுதல், சதுரங்கம் விளையாடுதல் போன்றவற்றில் ஈடுபட்டு விழித்திருக்கின்றனர். சிலர் திரைப்படம், தொலைக்காட்சி போன்றவற்றில் பக்திப்பாடல்களை பார்த்து விழித்திருக்க முயற்சிக்கின்றனர். இதனால் பயன் ஏதும் கிட்டுவதில்லை. இதில் ஆன்ம சுத்தியோ, உடற்சுத்தியோ ஏற்படுவதில்லை.

ஒரு காலத்தில் பெண்கள் சிவராத்திரியன்று விழித்திருக்க வேண்டிக் ‘கழங்காடுதல்’ என்ற விளையாட்டை விளையாடினர். இவ்வாறு விளையாடும்போது சிவனின் பெருமைகளைக் கூறக்கூடிய பாடல்களைப் பாடிக்களித்திருந்தனர். இதனால் அவர்களுக்கு சிவராத்திரியின் முழுப்பலனும் கிட்டியது. ஆனால், காலப்போக்கில் விளையாட்டு மட்டுமே நின்று சிவ சிந்தனை மறந்து போயிற்று.

ஒரே இடத்திலிருந்து கண் விழித்து வழிபடுபவர்களாக இருந்தாலும், பல தலங்களுக்குச் சென்று வழிபடுபவர்களாக இருந்தாலும் சிவநாமத்தை நினைத்துக் கொண்டேயிருக்க வேண்டும். அவ்வாறு இரவு முழுவதும் சிவனை நினைப்பவர்களுக்கே சிவராத்திரியின் முழுப்பலனும் கிட்டும். எனவே கேளிக்கைகளில் மனம் செலுத்தவாவது சிந்தை மகிழச் சிவபுராணத்தை பொருளுணர்ந்து சொல்ல வேண்டும் என்பது நியதி.

அர்ச்சுனன் தவம் இருந்து, சிவபெருமானிடமிருந்து பாசுபதம் என்ற அஸ்திரம் பெற்ற திருநாள்; கண்ணப்ப நாயனார், குருதி வடியும் லிங்க வடிவிலிருந்த ஈசனின் கண் மீது தன் கண்ணைப் பெயர்த்தெடுத்துப் பொருத்தி முக்தி அடைந்த நன்னாள்; பகீரதன், கடுந்தவம் செய்து கங்கையை பூமிக்குக் கொண்டு வந்த பொன்னாள்; மார்க்கண்டேயனுக்காக யமனையே சிவபெருமான் சம்ஹாரம் செய்தது இந்த நாளில்தான் என்கின்றன புராணங்கள்.

வீட்டில் பூஜை செய்பவர்கள் சிவபெருமான் படத்திற்கோ அல்லது நடராஜர்  விக்கிரகத்திற்கோ வில்வ தளங்களால் அர்ச்சிப்பது சிறந்தது. இந்த மகா சிவராத்திரியன்று சிவனுக்கு அர்ப்பணம் செய்யும் ஒரு வில்வ தளம், கோடிக்கணக்கான மலர்களால், ஈசனை அர்ச்சனை செய்வதற்குச் சமம். அன்று முழுநாள் உபவாசம் இருப்பார்கள். அல்லது ஒரு வேளைச் சாப்பாட்டுடன் நிறுத்திக் கொள்வார்கள். இரவு முழுவதும் கண் விழித்து, சிவ தோத்திரங்களைப் பாடுவார்கள்.

நதிகளில் பாகீரதி, மரங்களில் கற்பகதரு, பசுக்களில் காமதேனு, யானைகளில் ஐராவதம், கடலில் திருப்பாற்கடல், மலைகளில் கைலாசம் போன்று விரதங்களில் சிவராத்திரி என்று சொல்வர்.

சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்போர்க்கு காசியில் முக்தி அடைந்த பலன் கிட்டுகிறது. சிவனுக்கு வில்வத்தினால் இன்று பூஜை செய்பவர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது உறுதி.


Click Here

வ. சித்ரலேகா
          நம் வாழ்க்கையில் சம்பந்தப்பட்ட அனைத் தையும் அளந்து விடலாம். எல்லாவற்றிற்கும் ஓர் அளவுகோல் உண்டு. ஆனால்… நம்மால் அளவிட முடியாத ஒன்று இவ்வுலகில் உண்டு. அது என்ன?
அதுவே தெய்வங்களின் இறையருளாகும்.
இறையருளில் கலந்திருப்பது அன்பு…
அன்பு… அன்பு… அளவற்ற அன்பு, அளவற்ற கருணை, அளவற்ற சக்தி… அளவற்ற ஆற்றல்! இவ்விதம் அனைத்திலும் அளவில்லாத இறைவனின் அருள், இருள் நீக்கும் ஒளியாகச் செயல்படுகிறது.
தீயவன் நல்லவனாகவும், வறியவன் வளம் கொழிக்கும் செல்வந்தனாகவும், நோயாளி திடகாத்திரமான ஆரோக்யசாலிலியாகவும், கல்விஅறிவு இல்லாதவன் உயர்கல்வியைப் பெற்று சிறந்த கல்வியாளனாகவும், ஏன்… கவிஞனாகவும்கூட ஆகிறான்- தெய்வங்களின் சக்தியால்.
தீமைகளை அழித்து நல்லன அளிப்பது தெய்வசக்தி. மனிதர்களின் ஆணவம், அகம் பாவம்… இன்னும் பற்பல துர்க்குணங்களை அழித்து, அவனை நல்ல மனிதனாக மாற்று வதும் இறைசக்தி!
திருந்தக் கூடியவர்களைத் திருத்துபவன் அவன்! திருந்த மறுப்பவர்களை அழித்துவிடக் கூடியவனும் அவனே. அத்தகைய வலிலிய சக்தி கொண்ட தெய்வம் எது என்ற கேள்வி எழுகிறது அல்லவா? அவன்தான் சிம்மன்… நரசிம்மன்! மனித உருவமும் சிங்க முகமும் கொண்ட சிங்கமுகப் பெருமாள் நரசிம்மன்!
நரசிம்ம தெய்வத்திற்குப் பல கோவில்கள் உள்ளன. அவற்றுள் உக்கிர மூர்த்தியாக ஸ்ரீபக்த பிரகலாதனுக்குக் காட்சி அளித்த ஸ்தலம் சிங்கர்குடி என்று அழைக்கப்படும் தலமாகும்.
நாராயணனின் நான்காவது அவதாரம் நரசிம்ம அவதாரம்! “நாராயணன் தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான்’ என்று தந்தை ஹிரண்யனிடம் வாதிட்டவன் பிரகலாதன்! தீய இயல்பு கொண்ட ஹிரண் யனை ஆக்ரோஷமாகப் பிளந்து அவனை அழித்தவர் நரசிம்மர். அவர் அழித்தது ஹிரண்யனைத்தான் என்றாலும், அதன் பின்னணியை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
அதர்மம், அதர்த்தம், அசத்தியம், அமோட்சம் ஆகிய துர்க்குணங்களை அழிப்பதுதான் உக்கிர நரசிம்மரது ஹிரண்ய வதம் வெளிப்படுத்தும் தாத்பர்யம்.
அர்த்தம் என்பது வாழ்க்கையின் அர்த் தங்களைப் புரிந்து கொள்ளுதல் மற்றும் வேதங்களின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளுதல் ஆகும். மோட்சம் என்பது- தர்மத்தைப் போதிப்பது, பிறருக்கு உதவி செய்வது ஆகியவையாகும்.
சாஸ்திரங்களை மீறி- அவற்றை அலட்சியப்படுத்தி, அவரவர் மனம் போன போக்கில் தெய்வ வழிபாட்டில் ஈடுபடக்கூடாது.
அதாவது ஒருவன், “நான் ஒரு வேலையும் செய்ய மாட்டேன். மூன்று வேளையும் மூக்கு முட்ட உணவு உட்கொள் வேன். வீட்டிலேயே உட்கார்ந்து ஸ்வாமி நாமங்களைக் கூறிக் கொண்டிருப்பேன். நான்தான் சிறந்த பக்தன்’ என்று சொல்லிலி மோட்சத்தை எதிர்பார்த்தால் அது கிடைக் குமா? “நான் நாம சங்கீர்த்தனம் மட்டுமே செய்து வாழ்வேன். இறைவனை வழிபடுவேன்’ என்று முடிவு எடுப்பவன், என்றோ ஒரு நாள் மட்டுமே உணவு உட்கொண்டு, மற்ற அனைத் தையும் விட்டு விட்டு… பற்றுதலை இற்றுப் போக வைத்துவிட்டு, நாம சங்கீர்த்தனம் பண்ணிக் கொண்டிருந்தால் அது இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படும்.
நரசிம்மருக்கு பத்து ரூபாய்க்கு பூ அல்லது பழம் மட்டுமே வாங்கக் கூடிய பண வசதி உள்ளவன், கடன் வாங்கி இருநூறு ரூபாய் செலவு செய்து நரசிம்ம ருக்குக் கைங்கர்யம் செய்தால் அது அதர்மம். இருநூறு ரூபாய் செலவு செய்யக் கூடியவன், கடவுளுக்கு வெறும் இரண்டு ரூபாய் மட்டுமே செலவு செய்தால் இதுவும் அதர்மம்.
அதர்மத்தை அழிக்கும் எண்ணத்தில்தான், நரசிம்மர் ஹிரண்யனை அழித்தார். ஹிரண்யனை அழிக்கும் உக்கிர மூர்த்தியாக நரசிம்மரைத் தரிசித்து வணங்குவதற்கு சிங்கர்குடி நரசிம்மர் ஆலயத்திற்குச் செல்ல வேண்டும்.
சிங்கர்குடி நரசிம்மர் ஆலயத்தின் கோபுரம் பற்பல வண்ணச் சிற்பங்களைக் கொண்டதாக மிக அழகாக இருக்கின்றது. உள்ளே நுழைந்த தும், இடது பக்கம் கனக துர்க்கையின் சந்நிதி உள்ளது. வலது பக்கம் நாகர், குங்கும அபிஷேகம் செய்யப்பட்ட கோலத்தில் இருக் கிறார். இக்கோவில் பல்லவ அரசர்களால் கட்டப்பட்டது. பல்லவர்கள் அரசாண்டு வந்த காலத்தில் மன்னர்களும், போர் வீரர் களும் கனக துர்க்கையை வழிபட்ட பின்னரே, கோவிலுக்குச் செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது.
உக்கிர நரசிம்மரின் கருவறைக்குச் செல்லும்பொழுது, நாம் விநாயகர் என்று அழைக்கும் தும்பிக்கை ஆழ்வார், இங்கு வாசிஷ்ட விநாயகர் எனும் நாமம் கொண்டு தனிச் சந்நிதியில் காட்சி அளிக்கிறார்.
இவரை வணங்கிவிட்டு, கொடி மரத்தின்முன் நின்று வணங்கிய பிறகு, கருடாழ்வாரை வணங்கி, அதன்பின் உக்கிர நரசிம்மரைத் தரிசனம் செய்ய மனம் துடிக்கின்றது.
கோபம் பொங்கிய உக்கிரமான உருவில் காட்சி அளிக்கும் நரசிம்மரைப் பார்க்க, உடல் புல்லரிக்கின்றது. இவரது பதினாறு கைகளில் எட்டு கைகள் நமக்குப் பல பாதுகாப்புகளை வழங்கும் ஆயுதங்களான சங்கு, சக்கரம், குறுவாள், பதாகஹஸ்தம், சூலம், வில், கதை, கேடயம் ஆகிய ஆயுதங்களை ஏந்தியுள் ளன.
மற்ற எட்டு கைகளில் ஒரு கை ஹிரண்யனின் தலையை அழுந்தப் பிடித்துள்ளது. மற்ற கைகள் ஹிரண்யனின் குடலைக் கிழிப்பதும், அவனது தலையைக் கிள்ளி எறிவதுமான தீயவனை அழிக்கும் செயல்களைப் புரிகின் றன.
உக்கிர நரசிம்மரின் அந்தக் காட்சியைக் காணும்பொழுது நம் வாழ்வில் ஏற்படும் தீமைகள், துன்பங்கள், துயரங்கள் ஆகிய வற்றையும் அழித்து, நல்வாழ்வு அளிக்கும்படி நம் இதயத்தில் வேண்டுதல் தோன்றுகிறது.
நரசிம்மரைத் தரிசனம் செய்தபிறகு வெளிப்பிராகாரத்தில் அழகிய வண்ண வேலைப்பாடுகள் செய்த தூண்களால் தாங்கப்படும் மண்டபத்தில், தனிச் சந்நிதியில் கனகவல்லிலித் தாயார் மிகமிக அழகாக வீற்றுள்ளாள். “கனகவல்லிலித் தாயாரே… கனகத்தை அள்ளிக் கொடு தாயே… நோயற்ற வாழ்வு எனும் குறைவற்ற செல்வத்திற்கு ஈடான கனகத்தை அள்ளிக் கொடு தாயே’ என்று மனம் வேண்டுகிறது.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் தாயாரை ஊஞ்சலிலில் அமர்த்தி விழாக்கோலம் நடக்கிறது. உக்கிர நரசிம்மப் பெருமாளின் உற்ற துணைவியான கனகவல்லிலித் தாயாரின் அழகிய வடிவம் கண்டு இவ்வுலகே மறக்கிறது.
தாயாருக்கு இடது பக்கம் உள்ள ராமர், சீதை, லட்சுமணன், ஆஞ்சனேயர் சந்நிதியில் “ஹரே ராம ஹரே ராம’ எனும் நாம சங்கீர்த் தனம் ஒலிலித்தபடி உள்ளத்தில் ஒளியூட்டியது.
பிரதோஷத்தன்று நரசிம்மருக்கு விசேஷ பூஜையும் அபிஷேகமும் நடைபெறும். வெளிப்பிராகாரத்தில் கோதை நாச்சியார் எனும் நாமம் கொண்ட ஆண்டாள் வீற்றுள் ளாள். “ஆண்டாளம்மா! துன்பங்கள் இனி வேண்டாமம்மா’ என்று வேண்டிக் கொள்ள மனம் விழைகிறது. மிகச் சிறந்த பிரார்த்தனை தலமான சிங்கர்குடி உக்கிர நரசிம்மர் சந்நிதியில் பிரார்த்தித்துக் கொண்டால், நமது வேண்டுதல்கள் யாவும் நிறைவேறும். மனிதப் பிறவிகளான நமது பிரார்த்தனைகள் மட்டுமல்லாமல், புராண காலத்து மகான் களான வசிஷ்டர், ஜமதக்னி முனிவர், பிருகு முனிவர், இந்திரன், சுக்கிரன், பிரகலாதன் ஆகியோரின் பிரார்த்தனைகளையும் ஈடேற்றி யிருக்கிறார் என்கிறது தல வரலாறு.
தீமைகளையும் தீயவர்களையும் அழிக்கும் நரசிம்மர், நல்லவர்களுக்கு நலம் அளித்து நன்மைகள் புரிகிறார். எனவே பிறருக்குத் தீங்கிழைக்காமல் வாழ வேண்டும். அகம் பாவம், ஆணவம், அநியாய நடவடிக்கைகள் ஆகியவை அழிவைத்தான் அளிக்கும் என்பதை புராண காலத்தில், ஹிரண்யனை வதம் செய்து பாடம் புகட்டினார் உக்கிர நரசிம்மர்.
அந்தக் கோலத்தை சிங்கர்குடியில், தன்னை நாடி வரும் அனைவருக்கும் காட்டி, நன்மைகள் மட்டுமே செய்யும்படி நமக்கு வலிலியுறுத்துகிறார் நரசிம்மர்.
இவரது சீற்றம் நம்மை சீர்படுத்தவே என்பதைப் புரிந்து கொண்டு, நரசிம்மர் பாதம் பணிந்து வேண்டுவன யாவும் பெற்று வாழ்வோம்.
சிங்கர்குடி நரசிம்மர் கோவில், கடலூர்- புதுச்சேரி பாதையில் தவளக்குப்பம் எனும் ஊரிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலை வில் உள்ள சிங்கர்குடி எனும் இடத்தில் உள்ளது.
Click Here

ஸ்ரீனிவாசன்
     திருவண்ணாமலையை வலம் வந்து வணங்குவது விசேஷம். இதேபோல், திருவண்ணாமலைக்கு அருகிலுள்ள பெரண மல்லூரில், சிறு குன்றில் அருள்பாலிக்கும் ஸ்ரீவரத ஆஞ்சனேயரையும் எண்ணற்ற பக்தர் கள் வலம் வந்து வழிபடுகின்றனர். 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்தவர் இந்த ஆஞ்சனேயர்.
இங்கு பல்லவர் காலத்தில் எழுப்பப்பட்ட சிவாலயமும் விஷ்ணு கோவிலும் உள்ளன. இயற்கை அழகு கொஞ்சி விளையாடும் இந்த ஊரில் வாழ்ந்த ஒரு தம்பதிக்கு, கொஞ்சி விளையாடப் பிள்ளை இல்லை என்பது பெருங்குறையாக இருந்தது. ஒருநாள் கணவனும்- மனைவியும் வயல் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கலப்பையில் ஏதோ தட்டுப்பட, அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்த தம்பதி வியந்து நின்றது. அது அழகிய அனுமன் விக்கிரகம். அதனை எடுத்து அருகிலிருந்த சிறு குன்றின்மேல் பிரதிஷ்டை செய்து கோவில் அமைத்து வழிபடத் துவங்கினர்.
அடுத்த வருடமே அவர்களுக்குக் குழந்தை பிறந்தது. ஊரே வியந்து அனுமனைக் கொண்டாடி வழிபட்டது. அனுமனின் அருளாடல் மெல்ல மெல்ல அக்கம்பக்க ஊர்களுக்கும் பரவியது. அனைவரும் இந்த அனுமனை வழிபட்டு அருள்பெற்றனர். எனினும், காலப்போக்கில் வழிபாடுகள் நின்று போயின. சுமார் 42 ஆண்டுகள் எந்தவிதமான பூஜையும் திருவிழாவும் நடத்தப்பட வில்லை. சுற்றுச்சுவர்கூட இல்லாத இந்தக் கோவில் புதர் மண்டிக் கிடந்தது.

இந்நிலையில் 2003-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சென்னையைச் சேர்ந்த சுமார் மூன்று வயதுடைய சிறுவன் தன்னுடைய பாட்டி வீட்டிற்கு வந்தான். ஒரு நாள் வீட்டிற்கு அருகிலுள்ள  இந்த அனுமன் கோவில் படிக்கட்டுகளில் மெல்ல மெல்ல ஏறி, மூலவர் சந்நிதியை அடைந்தான். நடந்து வரும் பாதைகளிலும் மூலவர் சந்நிதிக்குள்ளேயும் இருக்கும் கழிவுகளைக் கண்டு மிகவும் வேதனை அடைந்தான். பின்பு கோவில் முழுவதும் பரவியுள்ள முட்புதர்களையும் கழிவுகளையும் தானே கொஞ்சம் கொஞ்சமாக சுத்தம் செய்வதாகக் கூறினான். சிறுவன் கூறியதை அருகில் இருந்தவர்கள் கேட்டு, அடுத்த நாட்களிலேயே சுத்தம் செய்யும் பணிகளில் தாங்களும் ஈடுபட்டனர். அதன் பின்பு ஊரில் உள்ளவர்களும் ஈடுபட்டனர். போதுமான நிதிஉதவி இல்லாத காரணத் தால், 2003-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்தினர். அதன்மூலம் திருப்பணி வேலைகள் செய்யப்பட்டு அனுமனுக்கு தினந்தோறும் பூஜைகளும் அமாவாசையில் கிரிவலமும் அனுமன் ஜெயந்தி திருவிழாவும் நடைபெற்று வருகின்றன.
கோவில் கிழக்குமுகமாய் இருப்பினும் ஆஞ்சனேயரின் முகம் வடக்கு நோக்கியுள் ளது. இவரது வலது கை தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு உடனடியாக அபயமளித்து வேண்டிய வரத்தைக் கொடுப்பதாக உள்ளது. இடது கரத்தில் சக்திவாய்ந்த தண்டம் ஏந்தி நிற்கிறார். இதன் மூலம் பக்தர்களின் அனைத்து பயங்களையும் நீக்குகிறார்; தீயவர்களை நல்லவர்களாக்கவும் அருள்புரிகிறார். நவகிரகங்களின் அளவற்ற சக்தியையும்கூட கட்டுப்படுத்தும் சக்தி ஆஞ்சனேயரின் வாலுக்கு உண்டு. பெரண மல்லூர் அனுமனின் ஈடிணையற்ற அழகிற்கு இந்த வால் மேலும் அழகூட்டுகிறது.
அமாவாசைதோறும் இவருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. அன்று ராம நாம கோஷத்துடன் கிரிவலமும் நடைபெறுகின்றது. அப்போது திரளான பக்தர்கள் இங்கு வந்து அனுமனை வழிபட்டு அருள்பெற்றுச் செல்கின்றனர்.
மார்கழி மாத அனுமன் ஜெயந்தியின்போது சிறப்பு அபிஷேகத்துடன் 1,008 உளுந்து வடை மாலை, வெற்றிலை மாலை சிறப்பு அலங்காரத்துடன் அனுமன் காட்சி தருவார். ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.
திருமணத் தடை நீக்கம், பிரிந்த தம்பதியர் ஒன்று சேருதல், சனி தோஷ நிவர்த்தி, குழந்தைப் பேறு போன்ற வரங்களைப் பெற்று பக்தர்கள் பலனடைகின்றனர்.
சென்னை நங்கநல்லூரில் ஸ்ரீஆஞ்சனேயருக்கு கோவில் எழுப்ப முனைந்து ஸ்ரீ அனுமன் விக்கிரம் வடிப்பதற்காக அருகிலுள்ள இஞ்சிமேட்டில் இருந்து கல்லை கிரேன் மூலம் எடுத்துச் சென்றபோது பல தடங்கல்கள் ஏற்பட்டன. இஞ்சிமேடு கோவில் பட்டாச்சாரியாரது அறிவுரையின் பேரில், பெரணமல்லூரில் உள்ள இந்த அனுமன் கோவிலுக்கு வந்து அர்ச்சனை செய்து வழிபட்ட பின்னர், எந்தத் தடங்கலும் இல்லாமல் கல்லை சென்னைக்குக் கொண்டு சென்றனர் என்று இவ்வூரைச் சேர்ந்த பெரியவர் கள் சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர்.
தற்போது பக்தர்கள் அளித்த நன்கொடையின் மூலம் கோவில் சுற்றுச்சுவர் திருப்பணி வேலை கள் முடிவடைந்து விட்டன.
கோவிலின் விமானம், குன்றின்மீதுள்ள அர்த்த மண்டபம், அன்னதானக் கூடம் முதலியன கட்டி முடித்து விரைவில் கும்பாபிஷேகம் நடத்த எண்ணியுள்ளார்கள். திருப்பணியில் பங்கு பெற எண்ணுவோர் 97903 87313 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

  ஈழத்துச் சிதம்பரத்தில் பஞ்ச ரத பவனி 

ஈழத்து சிதம்பரம் என அழைக்கப்படும் காரைநகர் சிவன் கோவில் மார்கழி திருவாதிரை உற்சவத்தின் பஞ்ச ரத தேர்த்திருவிழா இன்று நடைபெற்றது.

அதிகாலை முதல் மூலவருக்கு விசேட அபிஷேகங்கள் ஆராதனைகள் இடம்பெற்று சோடச உபசாரங்களுடன் திருவிழா நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டிருந்தனர்.

படங்கள்: மயூரப்பிரியன்

___


பொற்குன்றம் சுகந்தன்
             உத்தராயணப் புண்ணிய காலத்தில் வரும் தை அமாவாசை பிதுர் வழிபாட்டிற்கு உகந்த நாள். இந்நாளில் புனிதமான கடற்கரையிலோ, புண்ணிய நதிக்கரையிலோ, தீர்த்தங் களிலோ நீராடி, வேத விற்பன் னர் வழிகாட்டுதலுடன், நீத்தார் வழிபாட்டிற்குரிய பூஜையைச் செய்வது போற்றப்படுகிறது.

அக்னி தீர்த்தம் உள்ள கடற்கரையான ராமேஸ்வரம், திருப்புல்லாணி, வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திலதர்ப்பணபுரி, திருவெண்காடு, மகாமகத் தீர்த்தக்குளம், காவேரி சங்கமம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், முக்கொம்பு, திருவையாறு தலத்தில் ஓடும் பஞ்சநதிக்கரை ஆகியவை பிதுர் பூஜைக் குரிய தலங்கள் என்று போற்றப்படுகின்றன. இவையன்றியும் பல தலங்கள் உள்ளன.
தமிழகத்தில் பிதுர் பூஜைக்குரிய இடங்கள் பல இருப்பதுபோல், வட நாட்டில் காசி, பத்ரிநாத், கயா போன்ற இடங்களில் எப்பொழுதும் எந்நாளிலும் பிதுர் பூஜை செய்யலாம்.  அந்த வகையில் காசியில் மணிகர்ணிகா கட்டம் மிகவும் புகழ்பெற்றுத் திகழ்கிறது.
அதேபோல் கேரளாவில்  ”ஐவர் மடம்’ என்னும் தலம் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. இங்குள்ள மயானத்தில் தினமும் அறுபதிலிருந்து எழுபத்தைந்து சடலங்கள் தகனம் செய்யப்படுகின்றன. இந்த இடம் காசி கங்கைக்கரையோரம் உள்ள மணிகர்ணிகா காட் என்ற இடத்தை நினைவூட்டுகிறது.
ஐவர் மடத்தின் அருகில் பாரதப் புழா என்னும் நதி ஓடுகிறது. இந்த நதியில் ஐந்து நதிகள் கலந்து வருவதால் மேன்மேலும் சிறப்புப் பெறுகிறது. இந்த நதிக்கரை அருகில்தான் மயானம் உள்ளது.
காசி மணிகர்ணிகா காட் என்னுமிடத்தில் உள்ள மயானத்தில் சடலங்கள் தகனமாகிக் கொண்டேயிருக்கும். வெகுதூரத்திலிருந்து சடலங்களைக் கொண்டு வந்து தகனம் செய்வார்கள். இங்கு சிவன் ஏற்றி வைத்த நெருப்பு இன்றும் கனன்று கொண்டி ருக்கிறது. அதிலிருந்து நெருப்பை எடுத்துதான் தகனத்திற்குத் தீமூட்டுவர்.
அதேபோல, ஐவர் மடம் மயானம் பஞ்சபாண்டவர்கள் மோட்சமடைந்த இடம் என்று கருதப்படுவதால், அவர்களது சடலங்கள் இங்கு எரியூட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. (இது குறித்து வேறு கருத்துகளும் உள்ளன).
விடியற்காலையிலேயே இந்த மயானம் சுறுசுறுப்படைகிறது. இங்கு காலை ஆறு மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை மட்டுமே சடலங்கள் எரியூட்டப்பட வேண்டும் என்ற விதி நடைமுறை யில் உள்ளதால், வெகுதூரத்திலிருந்தும்  வாகனங்களில் குறித்த நேரத்திற்குள் வந்து, சடலத்திற்குச் செய்ய வேண்டிய சடங்குகளை முறைப்படி செய்து எரியூட்டுகிறார்கள். இங்கு மின்சார தகனம் என்பது கிடையாது. (காசியில் மின்சாரத் தகனம் செய்ய வசதி உள்ளது. தொடர்மழையால் விறகுக் கட்டைகளைப் பயன்படுத்த முடியாதபோது மின்சாரத் தகனத்தை மேற்கொள்கிறார்கள்.)
ஒவ்வொரு அமாவாசையிலும் ஐவர் மடத்தில் தர்ப்பணம், நீத்தார் வழிபாடுகள் நடைபெறுகின்றன. குறிப்பாக தை, ஆடி, ஐப்பசி, புரட்டாசி அமாவாசை நாட்களில் இங்கு முன்னோர் களுக்கான வழிபாடுகள் செய்ய கூட்டம் நிரம்பி வழியும்.
துர்மரணம் அடைந்தவர்களுக்கு இங்கு சிறப்புப்பூஜை, சடங்கு கள் செய்தால், அவர்கள் ஆவியாக அலையாமல் சொர்க்கம் செல்லுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த மயானத்தின் அருகேயுள்ள ஸ்ரீகிருஷ்ணன் கோவிலில் அதற்குரிய பூஜைகள், ஹோமங்கள் செய்து, அந்த ஆத்மாவைச் சாந்தப்படுத்தி மேலுலகத்திற்குச் செல்ல வழிசெய்கிறார்கள்.
பொதுவாக அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கான வழி பாட்டினைச் செய்வதுடன், அன்னதானமும் செய்தால் தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் சுபிட்சம் நிறைந்து காணப் படும்.. அதில் தை அமாவாசை மேலும் சிறப்புமிக்கது!

 

2011 ஆம் ஆண்டு நம்மிடமிருந்து விடைபெற்றுச் செல்ல, 2012 ஆம் ஆண்டு இன்முகத்துடன் இன்று மலர்கின்றது. பிறக்கும் புது வருடம் எப்படி இருக்குமோ என்ற ஆதங்கம் நம் ஒவ்வொருவர் மனதிலும் எழத்தான் செய்கின்றது.

கடந்த வருட துன்ப துயரங்கள் மறைந்து பிறக்கும் ஆண்டிலாவது அமைதியும் ஆனந்தமும் கிட்டாதா என்று ஏங்கித் தவிக்கும் உள்ளங்கள் பல கோடி. நோய் நொடிகள், கஷ்ட நஷ்டங்கள், வேதனை சோதனைகள் – இப்படித் துன்பங்களுக்கு மேல் துன்பங்களைச் சந்தித்தவர்கள் அதிலிருந்து மீட்பு பெற நினைப்பதொன்றும் ஆச்சரியமல்லவே!

பழையன் கழிதலும் புதியன புகுதலும் என்று ஒவ்வொரு வருடப் பிறப்பின் போதும் நாம் கூறிக் கொள்கிறோம்; நம்மை நாமே தேற்றியும் கொள்கின்றோம். ஆனாலும், பழையன எங்கே கழிகின்றன? புதியன நம் வாழ்வில் எங்கே புகுந்து கொள்கின்றன?

ஒரு சிலரின் வாழ்வில் புதுமை புகுந்தாலும் அநேகரின் வாழ்வு நிலை அப்படியே தான் இருக்கின்றது. அதை நினைக்கும் போதே எமது உள்ளங்களில் ஒருவித விரக்தி தோன்றத்தான் செய்கின்றது.

நாம் என்னதான் நினைத்தாலும் எதிர்பார்த்திருந்தாலும் இறை சித்தமே நிரந்தரமானது. எனவேதான் நாம் துன்பப்படும் போதெல்லாம் இறைவனை நாடுகின்றோம்.

அதனால் தான் “நிரந்தரம்…நிரந்தரம்…நீயே நிரந்தம்… மாறும் உலகில் மாறா உன் அன்பே நிரந்தரம்…” என்று பாடுகின்றோம்.

“இறைவா எமக்கு மீட்புத்தாரும்…” என்று இருகரங்கூப்பி இரஞ்சுகின்றோம். நாம் கேட்பதெல்லாமே கிடைக்காவிட்டாலும் கூட, மன ஆறுதலும் சோதனைகளிலிருந்து ஓரளவு மீட்பும் கிடைக்கத்தானே செய்கின்றன?

நாம் நினைப்பதெல்லாமே நடந்துவிடுமானால், இறை சித்தம் என்பது இல்லாத ஒன்றாகி விடுமல்லவா?

“நமக்கும் மேலே ஒருவனடா, அவன் நாளும் தெரிந்த தலைவனடா…” எனும் கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கேற்ப, முறையான இறைவழிபாடு நமக்குக் கிடைக்கவேண்டிய நற்பலன்களை, சந்தோஷங்களை விரைவாகவும் – உரிய நேரத்திலும் கிடைக்கச் செய்யும் என்பதில் சிறிதேனும் சந்தேகமில்லை.

புதுவருடப் பிறப்பு என்றாலே இல்லங்களில் குதூகலமும் கொண்டாட்டங்களும் தானாகவே குடிபுகுந்துவிடும். புத்தாடை அணிந்து, ஆலயம் சென்று இறைவனைத் தொழுவதும், இறை ஆசீர் வேண்டி நிற்பதும், நமது வாழ்வுக்கு ஆதாரமாக இருக்கின்றது.

புது வருடப் பிறப்பன்று எமது தாய் – தந்தையரைப் பணிந்து ஆசீர் பெறுவதும் நமது தலையாய கடமையாகிறது. பெற்றோரை மட்டுமன்றி மூத்தோரிடமும் ஆசீர் பெறுவது நல்லது.

அதுமட்டுமல்ல, ஒருவருக்கொருவர் நல்வாழ்த்துக் கூறிக் கொள்வதிலும் மன நிறைவும் மகிழ்ச்சியும் கிடைக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. அண்டை அயலாருடன் நாம் பகைமை கொண்டிருந்தாலும் கூட, இத்தினத்தில் அவர்களுக்கும் நல்வாழ்த்துக் கூறுவது சிறந்த பண்பாகும்.

நம் வீட்டில், அயலில், சமூகத்தில் இன்று சண்டை சச்சரவுகளும், வீண் வாதங்களும் தலைவிரித்தாடுகின்றன. சாதாரண வாய்த் தகராறு ஆயுதமேந்தவும் உயிர்ப்பலி எடுக்கவும் கூட சமயத்தில் வாய்ப்பாகி விடுகின்றது.

சாந்தி, சமாதானம் அங்கே விடைபெற்றுத் தூரவழி சென்றுவிடுகின்றது.

ஆனால், புத்தாண்டுத் தினத்தில் நாம் ஒருவருக்கொருவர் வாழ்த்துக் கூறி, அன்பைப் பகிர்வதன் மூலம் வீட்டில், அயலில், நாட்டில், சமூகத்தில் என்று சாந்தியும் சமாதானமும் உலகெங்கும் கிளை பரப்பி நிற்கும், நிற்கவும் வேண்டும்.

எது எப்படியோ, பிறந்திருக்கும் 2012 ஆம் வருடமாவது நம் ஒவ்வொருவருக்கும், நலமாக, வளமாக அமைய – இறைவனைப் பிரார்த்திப்போம்.

இறையருள் என்றும் நம் அனைவரையும் துணைபுரிந்து காக்கட்டும்…!

இலங்கையில் மிக உயரமான சிவனின் சிலை _ 

இலங்கையில் திருஞான சம்பந்தரின் பாடல் பெற்ற திருத்தலம் என்ற பெருமையும் தட்சிண கைலாயம் என்ற நாமத்துடன் விளங்கும் திருகோணமலை திருக்கோணேஸ்வரத்தின் பெருமையை இன்னும் ஒரு படி ஓங்கச்செய்யும் வகையில் அண்மையில் 33 அடி உயரமான சிவபெருமானின் தியான நிலை சிலை திறப்பு வைபவம் இடம்பெற்றது.

இம்மாதம் 15 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு இச்சிலை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இலங்கையைப்பொறுத்தவரை மிக உயரமான சிவனின் சிலை இதுவாகும். பக்தர்கள் மனதை ஒரு முகப்படுத்தும் ஒரு சக்தி மிக்க ஞான நிலையை சிவனின் முகம் கொண்டிருக்கின்றது என்பது சிலையை வடித்த சிற்பியின் கைவண்ணமா அல்லது கோணேச்சர பெருமானின் சக்தியா என்பது தெரியவில்லை. சிலையை உற்றுப்பார்த்தால் இது விளங்கும்.

இந்த சிலையை உருவாக்கியவர் தமிழகம் காரைக்காலைச்சேர்ந்த சிற்பாசிரியர் கலியபெருமான் விஜயன் என்பவராவார். சிவனின் சிலை மட்டுமல்லாது இராவணன் வெட்டு எனும் கோயிலின் வாயிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள இடத்தில் தியான மண்டபமும் அன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. இதில் கடலில் கண்டெடுக்கப்பட்ட ஒரு லிங்கம் ஏனைய விக்ரகங்களுடன் கிடைத்த லஷ்மி சமேத நாராயண விக்ரமும் வைக்கப்பட்டுள்ளன.

சிலை திறக்கப்பட்ட அன்று பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருகோணமலை நகரத்திலிருந்து பார்த்தாலும் சிவனின் அந்த கம்பீரமும் சாந்தமும் கலந்த முகம் தெரிகிறது. பக்தர்களுக்காக அங்கு எடுக்கப்பட்ட படங்களைத்தருகிறோம்.

___

 


ஆர். துர்க்கா

கார்த்திகை மாதம் என்றாலே, கண்களையும் கருத்தினையும் குளிர்விக்கும் தீபங்களின் பேரெழில்தான் நினைவுக்கு வரும்.

அத்தகைய கார்த் திகையின் சிறப்பு களை இங்கு காண்போம்.

திருப்பதியில் கார்த்திகை

விஷ்ணு திருத்தலங்களில் மிகவும் புகழ் பெற்ற திருமலைத் திருப்பதியில் கார்த்திகை தீபத்தை மிகச் சிறப்பாகக் கொண்டாடுகின் றனர். அன்றைய தினம் பெருமாள் வீதியுலா வருவார். பின் “திருப்பு மண்டபம்’ என்ற இடத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப் பார். அதன்பின் கோவிலுக்கு  எதிரே உள்ள ஆலய நுழைவாயிலுக்கு அருகே சொக்கப் பானை கொளுத்துவதைக் கண்டு களிப்பார். அதன்பின் ஆலயம் செல்வார். அப்போது பக்தர்களுக்கு லட்டும், கார்த்திகைப் பொரியும் பிரசாத மாகத் தருவார்கள்.

கல்பாத்தி

கேரள மாநிலம், பாலக்காடு நகரின் ஒரு பகுதிதான் கல்பாத்தி. “காசியில் பாதி கல்பாத்தி’ என்பது இத்தலச்  சிறப்பு. அதற்குக் காரணம், காசியில் உள்ளதுபோல் இங்கேயும் காசி விஸ்வநாதர் ஆலயம் அமைந்துள்ளது. அங்கு போலவே ஆறு கால பூஜையும் செய்கின்றனர். அதுவுமின்றி, காசியிலுள்ள கங்கையைப்போலவே இங்கும் வற்றாத ஆறு ஓடுகிறது.

இக்கோவில் திருத்தேரை நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டுச் சிற்பிகள் சிறப்பாகச் செய்துள்ளனர். இக்கோவிலின் பெரிய விழா தேர்த் திருவிழாதான். ஐப்பசி மாதம் கடைசி மூன்று நாட்கள் தேர்த் திருவிழா நடக்கும். இத்தேர் கல்பாத்தியைச் சுற்றியுள்ள 18 கிராமங்களையும் வலம் வந்து கார்த்திகை மாத முதல் நாளன்று நிலைக்கு வரும். இவ்விழாவைக் காண தமிழக மக்களும் சென்று வருவார்கள்.

நெற்பொரி, அவல்

வேதாரண்யம் சிவாலயத்தில் எலி ஒன்று வசித்து வந்தது. இது தினமும் கருவறையில் ஏற்றி வைத்துள்ள தீபத்திற்கான நெய்யை உண்ணும். அப்படி ஒருநாள் உண்ணும்போது திரி தூண்டப் பட்டு பிரகாசமாக எரிந்தது. இப்படி தீபத்தை எரிய வைத்த எலியை சிவன் மறுபிறப்பில் மாபலி மன்னனாகப் பிறக்கச் செய்தார். அம்மன் னன் உடலில் எலிக்கு தீபச் சுடரினால் ஏற்பட்ட தீக்காயமும் அப்படியே இருந்தது.

தீப்புண் குணமாக மன்னன் சிவாலயத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தான். அப்போது மாபலி சக்கரவர்த்திக்கு கார்த்திகை தீபத்தன்று காட்சி கொடுத்து அருளினார் சிவன். நெய்தீபம் எரியத் துணைபுரிந்த எலியை பலியாக்கினார் சிவபிரான். நாமும் நெய் தீபம் ஏற்றலாமே.

காஞ்சியில் கார்த்திகை

சைவர்கள்போலவே வைணவர்களும் கார்த்திகைத் தீபத் திரு நாளைக் கொண்டாடு கின்றனர். மோட்சபுரியில் ஒன்றான காஞ்சிபுரத்தில் உள்ள தீபப் பிரகாசர் என்ற விளக்கொளிப் பெருமாள் ஆலயத்தில் கார்த்திகை தீப விழாவை சிறப்பாகச் செய்கின்றனர்.

பிரம்மன் சரஸ்வதியை விட்டு விலகி இருந்த நேரத்தில் ஒரு யாகம் செய்தார். அதனால் கோபம் கொண்ட சரஸ்வதி வேகவதி நதியாக மாறி வந்து தடுத்தாள். பிரம்மன் யாகத்தைக் காக்க எண்ணிய பெருமாள் பெரிய ஒளிப் பிழம்பாக மாறினார்.

அந்த ஒளிப்பிழம்பின் பெயரே தீபப் பிரகாசர். இவர் ஒளி வடிவில் இருந்து பிரம்மனின் யாகத்தைக் காக்கவும் இடையூறுகளைத் தடுக்கவும் முதற்கடவுளான சிவ லிங்கத்தை நிறுவி வழிபட்டார்.

அந்த லிங்கத்தின் பெயரே விளக்கொளி நாதர், தீயேஸ் வரர். இவ்வாலயத்தில் கார்த் திகை தீபத்தன்று தீபமேற்றி சிறப்பு வழி பாடுகள் செய் கின்றனர். இப்ப டித்தான் பெருமாள் தீபப் பிரகாசராகத் தோன்றியதுடன் தீயேஸ் வரரையும் பிரதிஷ்டை செய்தார்.

காசியிலும் தீபப் பிரகாசர்

காசியில் மணிகர்ணிகா துறை அருகில் மணிகர்ணிகேஸ்வரர் ஆலயம் உள்ளது. இக்கோவிலின் அருகேயுள்ள வீட்டு முற்றத் தில் தீபப் பிரகாச லிங்கம் உள்ளது. இதனை ஜோதி தீபேஸ்வரர் என அழைப்பர். இச் சந்நிதியில் கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்றி வழிபட்டால் எல்லா வகையான செல்வங்க ளும் பெறலாம் என்பது நம்பிக்கை.

தேவலோக அழகி களான அப்சரஸ் பெண்கள் இங்கு வந்து தீபமேற்றி வழிபட்டு பெரும் பேறு பெற்றனர் என்கின்றனர்.

திருப்பெருந்துறை (ஆவுடையார் கோவில்)

ஆத்ம ஒளியை அதிகரிக்கச் செய்யும் திருவாசகத்தை அருளியவர் மாணிக்க வாசகர். இவரை ஈசன் குருவாக வந்து திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் ஆட்கொண்டார்.
இக்கோவிலில் ஆகம தத்துவங்களை விளக்கும் வகையில் தீபங்களை அமைத்துள்ளனர். இது வேறெங் கும் இல்லாத அமைப்பாகும்.

எல்லா நட்சத்திரங்களையும் காட்ட முடியாது. எனவே, 27 நட்சத்திரங்கள் கரு வறையில் தீபமாக எரிகின்றன.

உலகைப் படைத்து, காத்து, அழித்து வழிநடத்தும் மும்மூர்த்திகளைக் காட்டும் வகையில் மஞ்சள், பச்சை, சிவப்பு என மூன்று வண்ணக் கண்ணாடி சட்டங்கள் இட்ட மூன்று விளக்குகள் கருவறையில் எரிகின்றன.

36 தத்துவங்களைக் குறிக்கும் தீபமாலை விளக்கை தேவ சபையில் ஏற்றி வைத்துள் ளனர்.

ஐந்து வகை கலைகளைக் குறிக்கும் ஐந்து விளக்குகளைக் கருவறையில் ஒன்றின்கீழ் ஒன்றாக ஏற்றி வைத்துள்ளனர்.

51 எழுத்துகளைக் கொண்டது வர்ணம். இதனைக் குறிக்கும் 51 விளக்குகள் கருவறைமுன் உள்ள அர்த்தமண்டபத்தில் உள்ளன.

உலகங்கள் 87. இதனைக் குறிப்பதற்கு கனக சபையில் குதிரைச் சாமிக்குப்பின் 87 விளக்கு கள் உள்ளன.

11 மந்திரங்களைக் குறிக்கும் 11 விளக்குகளை நடனசபையில் ஏற்றி வைத்துள்ளனர்.

இப்படி 27 நட்சத்திரங்கள், மும்மூர்த்திகள், 36 தத்துவங்கள், ஐந்து கலைகள், 51 வர்ணங்கள், 87 உலகங்கள், 11 மந்திரங்கள் என ஒவ்வொன்றையும் விளக்கும் வண்ணமுள்ளன இவ்விளக்குகள். இப்படிப்பட்ட அதிசய அமைப்பு ஆவுடையார் கோவிலின் மட்டுமேதான் உள்ளது.

லட்சதீபம்

ஒரு லட்சம் விளக்குகளால் ஆலயத்தை அலங்கரிப்பது லட்சதீபம் எனப்படும். மயிலாப்பூ ரில் ஆண்டுதோறும் லட்சதீப விழா நடக்கிறது. திருக்கழுக்குன்றத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை லட்சதீபம் ஏற்றுகின்றனர்.

மாவிளக்கு

அம்மன் ஆலயங்களில் நோய்தீர வேண்டிக் கொண்டு மாவிளக்கு ஏற்றுவார்கள். அரிசி மாவில் வெல்லம் போட்டு, இளநீர் விட்டுப் பிசைந்து உருண்டையாக்கி, நடுவில் குழித்து நெய் ஊற்றி திரி போட்டு ஏற்றுவது மாவிளக்கு.

கச்சபேஸ்வரர் ஆலயம் காஞ்சியில் உள்ளது. இங்கு கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த மாவிளக்கு தீபத்தை தலையில் வைத்துக்கொண்டு ஆலயத் தைச் சுற்றி வருவர்.

விருட்ச தீபம்

மர வடிவ விளக்குகளை ஏற்றினால் மரமே ஒளி விடுவது போல இருக்கும். சிதம்பரம், திருவண்ணா மலை, குருவாயூர் ஆலயங்களில் இந்த விருட்ச தீபத்தைக் காண லாம்.

நெற்பொரியால் மலை தீபம்

திருவண்ணாமலையில் கார்த்திகை மாதம் மலைமேல் தீபம் ஏற்றுவது விசேஷம். வீடுகளில் அன்று நெற்பொரியில் வெல்லப்பாகு கலந்து கூம்புபோல செய்து, அதன் உச்சியில் அகல் தீபம் ஏற்றுவர். இது மலைமீதே தீபம் ஏற்றி வழிபடுவது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.

தீபாராதனை

ஆலயத்தில் சுவாமிமுன் பூஜை நேரத்தில் தீபங்களைச் சுற்றிக் காட்டி தீபாராதனை செய்வார்கள். இதனை வெறும் சடங்காக  நினைக்கக் கூடாது. உலகின் தோற்றத்தையும் ஒடுக்கத்தையும் காட்டும் குறியீடாகக் கருதி வணங்க வேண்டும். அதனால் நமக்கு சுகபோகமும் ஞானமும் கிட்டும்.

நீரில் மகாவிஷ்ணு

ஸ்ரீமன் நாராயணன் கார்த்திகை மாதத்தில் ஒவ்வொரு வீட்டிலுள்ள நீரிலும் ஆவிர்பவிக் கிறார். அப்போது செய்யப்படும் சாளக்ராம பூஜை ஆயிரம் மடங்கு பலன் தரும். பாவம், வறுமை போன்றவற்றைப் போக்கி வளமான வாழ்வு பெறலாம்.

சோமவார விரதம்

கார்த்திகை மாத திங்கட்கிழமையன்று உபவாசம் இருந்து சிவபெருமானைப் பூஜிப் பதை சோமவார விரதம் என்பர். இது அளவற்ற புண்ணியத்தைக் கொடுக்கும். அன்று இறைவனுக்குச் செய்யும் அபிஷேகம், அர்ச்சனைக்கு விசேஷ பலன் உண்டு.

சங்காபிஷேகம்

சித்தாந்த ரத்னாகரம் என்ற நூலில், கார்த்திகை மாத திங்கட்கிழமையன்று செய்யும் சங்காபிஷேகத்தைப் பற்றிய தகவல் உள்ளது. இறைவன் கார்த்திகையில் அக்கினிப் பிழம்பாக உள்ள தால், அவரைக் குளிர்விக்கும் பொருட்டு சங்காபிஷேகம் செய்கின்றனர்.

கார்த்திகை மாதம் சூரியன் பகைவீடான விருச்சிகத்தில் சஞ்சரிப்பதும், அதில் சந்திரன் நீசத்தில் இருப்பதும் தோஷமாகிறது. இந்த தோஷத்தை நிவர்த்தி செய்ய சங்காபிஷேகம் செய்கின்றனர்.

திருமழிசை குளிர்நாயகி சமேத ஒத்தாண் டேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத திங்கட்கிழமையில் 108 சங்காபிஷேகம் செய்கின்றனர். மாலை லட்சதீபப் பெருவிழா வும், இரவு பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும் நடைபெறும்.

குமரி மாவட்ட பரணி தீபம்

திருக்கார்த்திகை நாளில் குமரி மாவட்டப் பெண்கள் தங்கள் வீட்டு முற்றத்தில் ஒரு தட்டில் பூ வைத்து, நடுவில் குத்து விளக்கேற்றி வைப்பர். அதன் அருகே பெரிய அகல் விளக்குகளை எரிய வைப்பர். இதுவே பரணி தீபம். தினமும் சுவாமி அறையில் தீபமேற்றி வழிபடுவர். மீதமான எண்ணெய், திரிகளை ஒரு பாத்திரத் தில் சேமிப்பர். தினமும் புதிய திரி, புதிய எண்ணெயில்தான் தீபமேற்றுவர். அந்த மிகுந்த எண்ணெய், திரிகளைக் கொண்டுதான் இந்த பரணி தீபத்தை ஏற்றுகின்றனர்.

ஸ்ரீவாஞ்சியம் கார்த்திகை நீராடல்

அத்திரி மகரிஷிக்கும் அனுசுயாவுக்கும் தத்தாத்ரேயர் மகனாகப் பிறக்க அருள் கிடைத்தது இத்தலத்தில்தான். எமதர்மனை வாகனமாகக் கொண்டு சிவபெருமான் எழுந்தருளிய தலம் இது. காசியில் இறந்தால் முக்தி கிடைக்கும்; ஆனால் பைரவ தண்டனை உண்டு. வாஞ்சியத்தில் முக்தி கிடைக்கும்; பைரவ தண்டனை இல்லை. இங்கு வழிபட்டால் பாவங்கள் குறைவதுடன் புண்ணியம் பெருகும் என்பர்.

இத்தலத்தில் இறப்போரின் காது மட்டும் (எந்த ஜீவன் ஆனாலும்) மேற்புறம் இருக்கும் படி கிடக்கும். அப்போது சிவபெருமான் அந்தக் காதில் பஞ்சாட்சர உபதேசம் செய்வார் எனக் கூறப்படுகிறது. அத்தகைய புண்ணியத் தலம் திருவாஞ்சியம்.

இவ்வாலயத்தில் உள்ள திருக்குளம் குப்த கங்கை, முனி தீர்த்தம் எனப்படுகிறது. கங்கையானவள் 999 பாகம் ரகசியமாக இந்த குப்த கங்கையில் வசிக்கிறாள். மீதி ஒரு பாகம் தான் காசியில் உள்ள கங்கையில் உள்ளாள். எனவே, கங்கையின் சக்தி காசியைவிட இங்கு அதிகம் என்பர். இந்த குப்த கங்கையில் கார்த் திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடி, இறைவனை வழிபட்டால் பஞ்சமா பாதகங் களும் விலகும். கார்த்திகை ஞாயிறு இங்கு விசேஷம். இப்படி நீராடுவதை கார்த்திகை நீராடல் என்பர்.

கார்த்திகை நீராடல் உற்சவம்தான் இங்கு விசேஷம். அந்நாளில் அதிகாலை ஐந்து மணி முதல் ஆறு மணிக்குள் ஈசனும் தேவியும் அஸ்திர தேவரோடு பிரகார வலம் வந்து, குப்த கங்கையின் கிழக்குக் கரையில் ஆசி வழங்குவார்கள். இதை தரிசிப்பதே புண்ணியம்.

முதல் ஞாயிறு நீராடினால், பிரம்ம ஹத்தி தோஷம் விலகும். விஸ்வபத்ரனின் பிரம்மஹத்தி தோஷம் இங்குதான் நீங்கியது. இரண்டாம் ஞாயிறு நீராடினால், கள் உண்டு மயங்         கிய பாவம் விலகும். மூன்றாம் ஞாயிறு நீராடினால், திருட்டுத் தொழிலால் ஏற்பட்ட பாவம் நீங்கும். நான்காம் ஞாயிறு நீராடினால், மனசஞ்சலம், ஜென்ம பாவம் விலகும். ஐந்தாம் ஞாயிறு நீராடினால், சம்சர்க்க தோஷம் விலகும். குடந்தை- நன்னிலம் வழியில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் உள்ளது.
கார்த்திகை கடை ஞாயிறு விரிஞ்சிபுரம் தொண்டை நாட்டுத் திருத்தலம். “விரிஞ்சிபுரம் மதிலழகு’ என்பர். மரகதாம்பிகை சமேத மார்க்கபந்தீஸ்வரர் இவ்வாலய சுயம்புலிங்கமாக உள்ளார்.

பிரம்மனின் பெயர் விரிஞ்ஞன். பிரம்மன் வழிபட்ட இத்தலத்திற்கு விரிஞ்சிபுரம் எனப் பெயர். திருவண்ணாமலையில் அடிமுடி காண திருமாலும் பிரம்மனும் முயன்றனர். தாழம்பூ வுடன் சேர்ந்து பிரம்மன் பொய் சொல்லி சாபம் பெற்றார். அந்தச் சாபம் நீங்க என்ன பிராயச்சித்தம் என ஈசனிடமே பிரம்மன் கேட்க, அதற்கு ஈசன் தேவரூபமாக காட்சி தராமல் உபாயம் செய்தார்.

விரிஞ்சிபுரம் தலத்தில் வசித்து சிவத்தொண்டு செய்யும் சிவநாதனுக்கும் நயனா நந்தினிக்கும் மகனாகப் பிறக்கும்படி செய்தார். பிரம்மன் சிறுவனாக இருந்தபோதே தந்தை இறந்து விட்டார். ஆலய தலைமை பூஜா உரிமையைப் பெற விரும்பிய தாயாதிகள் பூஜா உரிமை, வீடு, நிலம் யாவற்றையும் தங்களுக்கு எழுதித் தருமாறு சிறுவனை மிரட்டினர்.

இதனால் மனமுடைந்த சிறுவனின் தாய் ஈசனிடம் முறையிட்டு அழுதாள்; பின் வீடு திரும்பி உறங்கினாள். அப்போது கனவில் ஈசன் தோன்றி, “”நாளை ஆலய பிரம்ம தீர்த்தத்தில் உன் மகனை நீராட்டி வை” எனக் கூறி மறைந்தார். அன்று கடை ஞாயிற் றுக்கிழமைக்கு முதல் நாளான சனிக் கிழமை.

அவ்வாறே தாய் மகனை நீராட்டி குளக்கரையில் காத்திருந்த போது, ஈசன் கிழவர் வேடத்தில் வந்து சிறுவனை தன்னுடன் தீர்த்தத்தில் மூழ்க வைத்தார். ஒரு முகூர்த்த காலத்தில் அந்தச் சிறுவனுக்கு உபநயனம், பிரம்மோ பதேசம், சிவதீட்சை அனைத்தும் வழங்கி, பின் கரை ஏறிவந்து மகாலிங்கமாக மறைந்துவிட்டார். இதைக் கண்டு அனைவரும் வியந்தனர்.

அப்போது தேவர்கள் பூமாரி பெய்தனர். சுற்றுப்புற மன்னர்கள் (ஈசன் தங்களுக்கு கனவில் ஆணையிட்டபடி) பாலகனை யானைமீது ஏற்றி தீர்த்த திருமஞ்சன குடத்துடன்- மேளதாளத்துடன் ஊர்வலமாக ஆலயத்துக்கு அழைத்து வந்தனர். அப்போது ஆலயக் கதவுகள் தாமாகத் திறந்து கொண்டன.

சிறுவன் ஆகம விதிப்படி எல்லாம் அறிந்தவன்போல பூஜைகள் செய்தான். அபிஷேகம் செய்ய லிங்கத்தின் முடி எட்ட வில்லை. அதனால் ஈசன் திருமுடியை வளைத்து அபிஷேகத்தை ஏற்றுக்கொண்டார்.

அதேகோலத்தில் இப்போதும் முடிசாய்ந்த மகாலிங்கமாக இவ்வாலய இறைவனை நாம் காணலாம்.

திருவண்ணாமலையில் முடிகாண இயலாத பிரம்மன், இங்கே சிறுவனாகப் பிறந்தபோது இத்தலத்தில் இறைவனைப் பூஜித்து, அவரே முடி வளைந்து காட்சி கொடுத்த அதிசயத் தைக் காணலாம். அப்படி திருமுடி வளைந்த தினம்தான் கார்த்திகை மாத கடைஞாயிறு  தினம்.

இதனை இவ்வாலயத்தில் பெருவிழாவாகக் கொண்டாடுகின்றனர். இங்கு இன்னொரு சிறப்பும் நடைபெறுகிறது.

குழந்தை வரம் வேண்டுவோர் இங்குள்ள சிம்ம குளத்தில் நீராடி, ஈரத்துணியுடன் ஆலய வலம் வந்து பகவானை வணங் கினால் புத்திர பாக்கியம் கிட்டும். மேலும் பில்லி, சூன்யம் போன்ற வற்றால் பாதிக்கப்பட் டோரும் இப்படி நீராடி வழிபட்டால் இன்னல்கள் நீங்கப் பெறுவர்.

தாய்லாந்தில் கார்த்திகை

தமிழகத்தில் கார்த் திகை தீபம் கொண் டாடுவது போல அங்கும் இதை தேசிய விழாவாகக் கொண் டாட மன்னன் கட் டளையிட்டான். அதன்படி இப்போதும் நடக்கிறது. அந்த மன்னன் தமிழகப் பெண்ணை மணந்து கொண்டான். அவள் விருப்பப்படி இவ்விழாவை தாய்லாந்தில் கொண்டாடுகின் றனர்.

சிகாகோவில் கார்த்திகை

நவம்பர் மாத கடைசியில் இங்குள்ள மரங்கள் இலைகளை உதிர்த்துவிடும்.

அப்போது மரங்களில் மின் விளக்குகளால் அலங்காரம் செய்து விழாவாக கொண்டாடுவர். இது கார்த்திகை தீபம் போன்றது.

திருவண்ணாமலை என்று சொன்னாலும், இம்மலையில் ஏற்றப்படும் தீப ஜோதி யைத் தரிசித்தாலும் முக்தி கிட்டுமென்று சாஸ்திரம் கூறுகிறது.

இம்மலை கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,668 அடி உயரம் கொண்டது. எட்டு மைல் சுற்றளவுள்ளது.

கிருதயுகத்தில் இம்மலை அக்னி மலையாகவும்; திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும்; துவாபரயுகத்தில் தங்க மலையாகவும்; கலியுகத்தில் ஞானிகள், சித்தர்கள் பார்வையில் மரகத மலையாகவும்- பாமர மக்களுக்கு கல் மலையாகவும் காட்சி தருகிறது. இம்மலையில் ஏராளமான மூலிகைகளும் குகைகளும் உள்ளன. இம்மலை கடலில் மறைந்து போனதாகக் கருதப்படும் “லெமூரியா கண்டத்தின் எஞ்சிய பகுதி’ என்று மேனாட்டு ஆராய்ச்சியாளர்  பால்பிரண்டன் ‘ஙங்ள்ள்ஹஞ்ங் ச்ழ்ர்ம் ஆழ்ன்ய்ஹஸ்ரீட்ஹப்ஹ’ என்ற நூலில் ஆதாரங்களுடன் குறிப்பிட்டுள்ளார். இவர் மகான் ரமண மகரிஷியிடம் ஆசிபெற்றவர்.

எரிமலைக் குழம்புதான் இறுகிப்போய் மலையாகி உள்ளது என்று நவீன விஞ்ஞான ஆராய்ச்சியும் கூறுகிறது.

இமயமலையைவிட திருவண்ணாமலை மிகவும் பழமையானது என்பதை ஆதாரத்துடன் டாக்டர் பீர்பால் சகானி என்ற புவியியல் அறிஞர் நிரூபித்துள்ளார்.

இம்மலை ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் எனும் சிவபெருமானின் ஐந்து திருமுகங்களை நினைவூட்டும் பஞ்சகிரியாகக் காட்சி தருகிறது. இத்திருக்காட்சியை கிரிவலம் வரும்போது தரிசிக்கலாம்.

கீழ்திசையிலிருந்து பார்த்தால் ஒன்றாகத் தெரியும். மலையைச் சுற்றும் வழியில் இரண்டாகத் தெரியும். மலையின் பின்னால் மேற்கு திசையிலிருந்து பார்த்தாலும் கௌதம ஆசிரமத்திற்கு எதிரிலிருந்து பார்த்தாலும் மூன்று பிரிவாகத் தெரியும். இதை திரிமூர்த்தி தரிசனம் என்று போற்றுவார்கள்.

இந்தத் திரிமூர்த்தி தரிசனம் காணும் சாலையோரம், சேஷாத்ரி சுவாமிகள் தன்னை முழுவதுமாக மண்ணால் மூடிக்கொண்டு தவமிருந்த இடம் உள்ளது. இந்த இடத்தில் மட்டும் மண், கறுப்பு- சிவப்பு நிறத்தில் காணப்படும் அதிசயத்தைக் காணலாம். அங்கிருந்து சற்று நடந்தால் தொடர்ச்சியாக நான்கு மலையைப்போல் காட்சி தரும். வலம் வந்து முடிக்கும் தறுவாயில் மலை ஐந்து முகங்களுடன் காணப்படும்.

திருமால், பிரம்மா ஆகியோரின் அகந்தையை நீக்கி சிவபெருமான் லிங்கோத்பவராக- ஜோதிப் பிழம்பாகக் காட்சி தந்த திருத்தலம் இது. இந்த ஜோதி திருவுருவத்தின் வெம்மை தாங்காமல் தேவர்கள் வருந்தித் துன்பப்படவே, சிவபெருமான் மலையாகி நின்றதாகப் புராணங்கள் கூறுகின்றன.

இம்மலையில் தவமிருந்த பார்வதிக்கு சிவபெருமான் தன் உடலில் பாதி இடத்தை அளித்து, அர்த்தநாரீஸ்வரர் என்ற சிறப்புப் பெயரினைப் பெற்றார்.

இம்மலை உச்சியில் தீபம் ஏற்றி வலம் வந்த சிறப்பினை பார்வதிதேவி பெற்ற நாள் திருக்கார்த்திகை என்று புராணம் கூறுகிறது.

திருவண்ணாமலை வலம் வருவதால் கிடைக்கும் பலன்கள் ஏராளம். ஒருமுறை வலம் வரவேண்டும் என்று நினைத்து ஓரடி எடுத்து வைத்தால் ஒரு யாகம் செய்த பலனுடன் உலகை வலம் வந்த பலனும்; இரண்டடி எடுத்து வைத்தால் ராஜசூய யாகப் பலனுடன் புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலனும்; மூன்றடி எடுத்து வைத்தால் அசுவமேத யாகப் பலனுடன் தான- தர்மங்கள் பல செய்த புண்ணிய பலன்களும்; நான்கு அடி எடுத்து வைத்தால் எல்லா யாகங்களும் செய்த பலன்களும் கிட்டும் என்று அருணாச்சலப் புராணம் கூறுகிறது. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள கோவில்களையும் லிங்கங்களையும் தரிசித்தால் பேறுகள் பல பெறலாம் என்றும் புராணம் கூறுகிறது.

கிரிவலப் பாதையில் முதலில் தரிசனம் செய்ய வேண்டிய லிங்கம் இந்திர லிங்கம். கிழக்கு திசையில் அருள்புரியும் இந்திர லிங்கத்தை வழிபட்டால் செல்வச் செழிப்பு ஏற்படும்.

தென்கிழக்கு திசையில் வலது பக்கம் உள்ளது இரண்டாவது லிங்கமான அக்னி லிங்கம். செங்கம் சாலையில் தாமரைக்குளம் அருகே அமைந்துள்ள இந்த லிங்கத்தை வழிபட்டால் நோய் பயம் நீங்கும்; உடல் ஆரோக்கியமாகத் திகழும்.

மூன்றாவதான எம லிங்கம் தெற்கு திசையில் உள்ளது. இந்த லிங்கத்தின் அருகே சிம்ம தீர்த்தம் உள்ளது. இந்தத் தீர்த்தத்தில் நீராடி எம லிங்கத்தை வழிபட எமபயம் நீங்கும். இறுதிக் காலத்தில் எமவாதனை வாட்டாது.

தென்மேற்கு திசையில் நான்காவதான நிருதி லிங்கம் உள்ளது. இங்கிருந்து மலையைப் பார்த்தால் இறைவனும் இறைவியும் இணைந்த தோற்றம்போல் ஓர் அபூர்வ காட்சியைத் தரிசிக்கலாம். இங்குள்ள தீர்த்தம் சனி தீர்த்தம் எனப்படுகிறது. இந்த லிங்கத்தை வழிபட சனியின் தாக்கம் குறையும்.

ஐந்தாவதான வருண லிங்கம் மேற்கில் உள்ளது. இங்கு வருண தீர்த்தம் உள்ளது. வருண லிங்கத்தை வழிபட்டால் தீராத நோய்கள் நீங்கும்; நீரிழிவுத் தாக்கம் இருந்தால் கட்டுக்குள் அடங்கும்.

ஆறாவதான வாயு லிங்கம் வடமேற்கு திசையில் உள்ளது. இந்த லிங்கத்தைத் தரிசித்தால் எதிரிகளின் தொல்லை நீங்கும்; மூட்டுவலி, முழங்கால் வலி இருந்தால் நாளடைவில் குணமாகும்.

வடதிசையில் உள்ளது ஏழாவதான குபேர லிங்கம். இந்த லிங்கத்திற்கு காசுகளை (நாணயங்கள்) அர்ப்பணித்து வழிபட்டால் செல்வ வளம் பெருகும்.

எட்டாவது லிங்கமான ஈசான்ய லிங்கம் வடக்கு திசையில் உள்ளது. இந்த லிங்கத்தை வழிபட துன்பங்கள் போகும்.

இந்த அஷ்ட லிங்கங்களுக்கு எதிரில் உள்ள நந்திகள் லிங்கத்தைப் பார்த்த வண்ணம் காட்சி தராமல் மலையைப் பார்த்த வண்ணம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலையே சிவபெருமான் என்பதால் அனைத்து நந்திகளும் மலையைப் பார்த்த வண்ணம் உள்ளன.

மேலும், கிரிவலப் பாதையில் ஏராளமான கோவில்கள் உள்ளன. விநாயகர், துர்க்கை முதலான ஆலயங்களையும் வழிபட்டுப் பேறுகள் பெறலாம்.

கிரிவலம் வருவோர் திருவண்ணாமலையை மட்டும் வலம் வராமல், “அடி அண்ணாமலை’ என்று அழைக்கப்படும் மலையையும் சேர்த்து வலம் வர வேண்டும். இவ்வாறு வலம் வந்தால் எதிர்பாராத நல்ல பலன்கள் கிட்டும் என்பது நம்பிக்கை.

பலன் தரும் ஸ்லோகம் வறுமை நீங்கி, ஐஸ்வர்யங்கள் பெருக…

 

பக்திப்ரியாய பவரோக பயாபஹாய
உக்ராய துர்க பவ ஸாகரதாரணாய
ஜ்யோதிர்மயாய குணநாமஸுந்ருத்யகாய
தாரித்ரிய துக்க தஹனாய நமஸிவாய
& தாரித்ரிய தஹன சிவஸ்தோத்திரம்.

பொதுப் பொருள்: தன் மீது பக்தி கொண்டோரை அரவணைக்கும் பரமேஸ்வரனே நமஸ்காரம். பிறப்பு&இறப்பு என்ற நோயால் ஏற்படும் பயத்தை

விலக்குபவனே நமஸ்காரம். துஷ்டர்களை தண்டிப்பவனே, துயரங்கள் நிறைந்த சம்சார சாகரத்தை எளிதாகக் கடக்க வைப்பவனே நமஸ்காரம். ஜோதி

வடிவானவனே, பக்தர்களின் நாம கீர்த்தனத்தால் ஆனந்தம் கொண்டு நர்த்தனமாடும் சீலனே நமஸ்காரம். வறுமைப் பிணியைப் போக்கி, சகல

ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்கும் ஈசனே நமஸ்காரம்.
(இத்துதியை கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் துதித்தால் ஈசனருளால் வறுமை நீங்கி ஐஸ்வர்யங்கள் பெருகும்.)


டி.ஆர். பரிமளரங்கன்

உலகிலேயே மிக உயரமான சனீஸ்வரர் திருவுருவம் விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், கோரிமேட்டிற்கு அருகிலுள்ள மொரட்டாண்டி என்னும் கிராமத்தில் காணப்படுகிறது.

இயற்கைச் சூழலில் வெட்டவெளியில் நின்று கொண்டிருக்கும் இந்த சனீஸ்வரரைத் தரிசிப்பதற்கு முன், நம் பார்வைக்குத் தெரிபவர் மகாகணபதி ஆவார். சுமார் ஐம்பத்து நான்கு அடி உயரமுள்ள இவரது முதுகுப் பகுதியைத்தான் நாம் முதலில் தரிசிக்கிறோம். இந்த விநாயகரின் முதுகில் “நாளை வா’ என்ற வாசகம் பெரிய எழுத்துகளில் எழுதப்பட்டிருப்பது தனிச்சிறப்பு.

ஒருசமயம், சனி பகவான் விநாயகரைப் பிடிக்க வந்தார். இதனை அறிந்த விநாயகர், தன் முதுகில் “நாளை வா’ என்ற வாசகத்தை எழுதி வைத்துக்கொண்டு “முதுகைப் பார்’ என்கிறார். அவர் முதுகில் “நாளை வா’ என்ற வாசகத்தைப் பார்த்து விட்டு, அதன்படி மறுநாள் வந்தார் சனி பகவான். மறுநாளும் அந்த வாசகத்தைப் படித்துவிட்டு திரும்பிச் சென்றார். இதுவே தொடர்கதையாக, அன்று முதல் இன்று வரை விநாயகரை சனியால் பிடிக்க முடியவில்லை என்று புராணம் கூறும்.

இந்த மகாகணபதி பலவித அரிய மூலிகைச் சாற்றினைக் கொண்டு, விசேஷமாகப் பதப்படுத்தப்பட்ட களிமண்ணால் உருவாக்கப்பட்டவர். பெரிய திருவுருவிலிருக்கும் இந்த கணபதியை நவகிரக சாந்தி கணபதி என்றும் சொல்கிறார்கள். இவரைத் தரிசிக்க 27 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். படிகள் ஏறுவதற்கு முன் ஒரு சிறிய சிவலிங்கம் உள்ளது. அதற்கு பக்தர்கள் தங்கள் கைகளாலேயே நல்லெண்ணெயில் அபிஷேகம் செய்யலாம். இதனால் நம் தோஷங்கள் நீங்கும் என்பர்.

இந்த கணபதியின் எதிரேதான் உலகிலேயே மிக உயரமான சனீஸ்வர பகவான் இருபத்தேழு அடி உயரத்தில்- நின்ற கோலத்தில் மிக கம்பீரமாகக் காணப்படுகிறார்.

“பக்தானுக்ரஹ ஸ்ரீவிஸ்வரூப மகாசனீஸ்வரர்’ எனப்படும் இவர் பஞ்சலோகத்தில் உருவாக்கப்பட்டவர். பீடத்துடன் இவர் உயரம் முப்பத்து மூன்று அடியாகும். தங்க நிறத்தில் ஒளிரும் இந்த மகாசனீஸ்வரர் தன் வாகனமான காக்கையுடன் இல்லாமல் கழுகு வாகனத்துடன் திகழ்கி       றார். ஆக மங்களில் இவரது வாகனம் கழுகு என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

நான்கு கரங்களுடன் காட்சி தரும் இவர், மேல் வலதுகரத்தில் அம்பும், இடது கரத்தில் வில்லும் வைத்துள்ளார். கீழ் வலது, இடது கரங்கள் அபயம், வரதம் கொண்டு திகழ்கிறார். இவர் எழுந்தருளியுள்ள பீடத்தில் பன்னிரண்டு ராசிகளின் திருவுருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சனியால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபட்டால் எப்படிப்பட்ட துன்பங்களையும் நிவர்த்தி செய்வார் என்று சொல்கிறார்கள்.

இரண்டரை ஏக்கர் பரப்பளவுள்ள இந்தத் திறந்தவெளி வளாகத்தில், நவகிரகங்கள் தாங்கள் இருக்க வேண்டிய திசையில், பதினாறு அடி உயரத்தில் (கல் விக்ரகம்) தங்களுக்குரிய வாகனத்துடன் காட்சியளிக்கின்றன. அத்துடன் அந்தந்த கிரகத்திற்குரிய விருட்சங்களும் அருகில் உள்ளன. ஒவ்வொரு சிலையின் அடியிலும் சிவலிங்கம் உள்ளது.

இத்திருத்தலத்தினை சூரியத் தோட்டம் (சன் கார்டன்ஸ்) என்று அழைக்கிறார்கள். இந்தத் தோட்டத்தினைச் சுற்றி 27 நட்சத்திர மரங்கள், 60 வருடத்திற்கான விருட்சங்கள், 12 ராசிகளுக்கான மரங்கள், ஒன்பது கிரகங்களுக்கான மரங்கள் என 108 மரங்கள் இங்குள்ளன. மேலும், வண்ண வண்ண ரகம் கொண்ட ரோஜா மலர் வகைகளும் மற்றும் பல மலர்ச் செடிகளும் பூத்துக் குலுங்குகின்றன. மரங்கள், செடிகள் அனைத்தும் நவகிரக தோஷத்தை நீக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்த எழில்மிகுந்த தோட்டத்தின் நடுவில் சுமார் நாற்பது அடி நீளமுள்ள வாஸ்து பகவான் படுத்த நிலையில் அருள்புரிகிறார். இவரைத் தரிசித் தால் வாஸ்து தோஷம் நீங்குமாம்.

மகாகணபதியின் பின்புறத்தில் உள்ள சிறிய சந்நிதியில் திருமணக்கோலத் துடன் காட்சி தரும்- பஞ்சலோகத்தி னாலான மகாவல்லப கணபதியும், அவருடன் திருமணக்கோலத்தில் தேவசேனாதிபதியும் காட்சி தருகிறார்கள். இவர்களுக்கு அருகில் கோகிலாம்பிகை சமேத கல்யாணசுந்தரரும் காட்சி தருகிறார்.

இத்திருத்தலம் திண்டிவனத் திலிருந்து புதுச்சேரி செல்லும் வழியில் உள்ளது. பேருந்தில் பயணித்தால் கோரிமேடு என்ற இடத்தில் இறங்கி அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மொரட்டாண்டி கிரா மத்திற்குச் செல்ல வேண்டும்.

சனிப்பெயர்ச்சியின்போது இந்த மகாசனீஸ்வரரைத் தரிசிப் பது சிறப்பாகும்.

சனி பகவான் அருள்புரியும் திருத்தலங்கள் பல உள்ளன. அவற்றில் காரைக்கால் அருகேயுள்ள திருநள்ளாறு மிகவும் புகழ்பெற்றது. சனி பகவான் நீதியுடனும் நேர்மையுடனும் நடந்து கொள்வார் என்று சொன்னாலும், நள மகராஜா விஷயத்தில் சுயநலத்தைக் காட்டிவிட் டார் என்று புராணம் கூறும். அந்த தோஷம் நீங்க, திருநள்ளாறு திருத்தலத்தில் அருள்புரியும் தர்ப்பராண்யேஸ்வரரை வழிபட்டு தன் தவறுக்கான பரிகாரம் கேட்டார் சனி பகவான். தன் தவறை உணர்ந்ததால் சனி பகவானை தியானத்தில் நின்று அருளும்படி கூறினார் சிவபெருமான். அதனால் திருநள்ளாற்றில் சனி பகவான் கண்கள் மூடிய நிலையில் மௌனமாகக் காட்சி தருகிறார். இவரை சாஸ்திர சம்பிரதாயப் படி வழிபட சனியின் தாக்கம் நீங்கும். இவருக்கு அர்ச்சனை செய்தால் அந்தப் பொருட்களை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட வேண்டும்.

தேனி மாவட்டத்தில் உள்ள குச்சனூரில் சனி பகவான் சுயம்புமூர்த்தியாக எழுந்தருளி யுள்ளார். இத்தலத்தில்தான் சனீஸ்வரரைப் பிடித்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. சனியின் தாக்கம் உள்ளவர்கள் சனிக்கிழமைகளில் பால், பச்சரிசி, வெற்றிலைப் பாக்கு, பழம், தேங்காய், அவல், கறுப்பு எள், சர்க்கரை, உளுந்து, எள்ளுப் புண்ணாக்கு ஆகியவற்றைப் படைத்து, கறுப்பு வஸ்திரம் அணிவித்து, நல்லெண்ணெயில் விளக்கு ஏற்றி வழிபட்டால் ஏழரைச் சனியால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும் என்று ஜோதிடர் கள் சொல்வர். இவருக்குத் திருவுருவம் இல்லாமல், சற்று அகலமான லிங்கம்போல் காட்சி தருகிறார்.

திருக்கொள்ளிக்காடு தலம் திருத்துறைப் பூண்டியை அடுத்துள்ளது. இங்கு இறைவன்அக்னீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். இறைவி: மிருதுபாதநாயகி. இத்தல இறைவனை சனி பகவான் வீழ்ந்து வணங்கியதாகப் புராண வரலாறு கூறும். இங்கு சனி பகவானுக்கு தனிச் சந்நிதி உள்ளது. இறைவன், இறைவியை வழிபட்டபின், சனி பகவானை வழிபட சனி தோஷம் நீங்கும்.

திருவாரூரில் அருள்புரியும் இறைவன் வான்மீகநாதர். இறைவி- கமலாம்பிகை. இத்தலத் தில் சனி பகவான் சிவபெருமானை வழிபட்ட தாகச் சொல்லப்படுகிறது. மேலும், இத்தலத்தில் நவகிரகங்கள் ஒரே நேர்வரிசையில் நிற்பதைக் காணலாம். திருநள்ளாறில் சனி பகவானைத் தரிசிப்பவர்கள் தங்கள் முழு தோஷமும் நீங்க, திருவாரூரில் அருள்புரியும் ஈசனைத் தரிசனம் செய்ய வேண்டும் என்பதால், இத்தலம் தோஷ நிவர்த்தித் தலமாகப் போற்றப்படுகிறது.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பெரிச்சியூர். இங்குள்ள ஆலயத்தில் சனி பகவான் தனிச்சந்நிதியில் மேற்கு நோக்கி அருள்புரிகிறார். இவரை வழிபட சனியின் தோஷம் விலகும் என்பர்.

திருச்செந்தூர் கோவிலில் முருகப் பெருமானை வழிபட்டபின், அங்கு கிழக்கு நோக்கி தனியாகக் காட்சி தரும் சனி பகவானை வழிபட்டாலும்; திருச்சி உறையூரில் கூரை இல்லாத சந்நிதியில் எழுந்தருளியிருக்கும் வெக்காளி அம்மனைத் தரிசித்தபின், அக்கோவிலுக்குள் கிழக்கு நோக்கி தனிச்சந்நிதியில் அருள் புரியும் பொங்கு சனியை வழிபட்டா லும் சனியின் தோஷங் கள் நீங்கும்.

குடந்தை நாகேஸ் வரர் கோவிலிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. தேப்பெருமாநல்லூர். இத்தலத்தில் வேதாந்தநாயகி சமேத விஸ்வநாத சுவாமி அருள் புரிகிறார். இத்தலத்தில் உள்ள சனி பகவான், “ஈஸ்வரனையே பிடித்துவிட்டேன்’ என்ற அகந்தையுடன் நிற்கும் கோலத்தில், இடுப்பில் கை வைத்துக்கொண்டுள்ளார். இவர் சிவபெருமானால் இரண்டாகக் கிழிக்கப்பட்டு அதன்பிறகு மீண்டும் உயிர் பெற்றார். எனவே, இக்கோவிலில் அருள்புரியும் ஈசனையும் அம்பாளையும் வழிபட்டபின், சனி பகவானை வழிபட சனியின் தாக்கம் விலகும்.

கும்பகோணம் நாச்சியார் கோவில் அருகில் ஸ்ரீராமநாதசுவாமி- பர்வதவர்த்தினி கோவில் உள்ளது. இக்கோவிலில் தனிச் சந்நிதியில் சனி பகவான் தன் இரு மனைவிகளான மந்தாதேவி, ஜேஷ்டா தேவி, மகன்கள் மாந்தி, குளிகன் மற்றும் தசரத மகாராஜாவுடன் எழுந்தருளியுள்ளார். ஒரு காலத்தில் தசரத சக்கரவர்த்தி தன் நோய் குணமடைய இந்த ஆலயம் வந்து, புண்ணிய தீர்த்தத்தில் நீராடி சனி பகவானை வழிபட்டு குணம் பெற்றார். இதனை மெய்ப்பிக்கும் வகையில் தசரதரின் சிலை இங்கே அமைந்துள்ளது. குடும்பத்துடன் அருள்புரியும் இந்த சனி பகவானை வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூர் செல்லும் சாலையில் சுமார் பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது கல்பட்டு என்ற கிராமம். இங்குள்ள சுயம்பிரகாச ஆசிரமத்தில், நின்ற நிலையில் சுமார் இருபது அடி உயரத்தில் அருள்புரியும் சனி பகவானை வழிபட சனியின் தாக்கம் விலகும்.

கும்பகோணம் அருகிலுள்ள  சூரியனார் கோவிலில் சனி பகவான் தன் இரு பத்தினி களுடன் தனிச்சந்நிதியில் வாகனமின்றி அருள்புரிகிறார். இவரை குடும்பத்துடன் வழிபட அனைவரின் தோஷங்களும் நீங்கும் என்பர்.

கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள குத்தாலம் என்னும் கிராமத்தில் சோழீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் அடி காணமுடியாத பாதாள சனீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். இவரை அமிர்தகலச சனீஸ்வரர் என்றும் அழைப்பர். சுயம்புமூர்த்தியாக பாதாளத்தில் இருந்து வந்தவர். இவரது பீடம் பழுது பட்டிருந்ததால், திருப்பணி செய்வதற்காக சனி பகவானின் விக்கிரகத்தை அகற்று வதற்கு பீடத்தின் அடியில் பள்ளம் தோண்டினார்கள். சுமார் பதினைந்து அடி வரை தோண்டியும் பீடத்தின் அடிப் பகுதியைக் காண முடியாததால் அந்த வேலையை அப்படியே விட்டுவிட்டார்கள். அடி காணமுடியாத நிலையில் அப்படியே ஒழுங்குபடுத்தி சீர்செய்தார்கள்.

இரண்டு கரங்களுடன் பாதாள சனி பகவான் நின்ற நிலையில் கைகூப்பிய வண்ணம் காட்சி தருகிறார். கூப்பிய கைகளுக்குள் அமிர்த கலசம் உள்ளது. இவரை “பொங்கு சனி’ என்றும் சொல்வர். சனி பகவானை வணங்கும்போது நேரிடையாக அவரைப் பார்க்காமல், சற்று பக்கவாட்டில் நின்று வழிபட வேண்டும் என்று சாஸ்திரம் சொல்லும். ஏனெனில், சனியின் பார்வை நேரிடையாக நம்மீது படுவது மேலும் துன்பத்தைக் கொடுக்கும் என்பர். ஆனால், இங்கு எழுந்தருளியுள்ள பாதாள சனீஸ்வரரை நேரிடையாக நின்று வழிபடலாம் என்கிறார்கள். கைகளில் அமிர்த கலசம் இருப்பதால் நமக்கு அமிர்தமான வாழ்வினை வழங்குவார் என்பது நம்பிக்கை.

நூற்றியெட்டு வைணவத் திருத்தலங்களில் முதன்மையான தலமான ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோவிலில், ஸ்ரீசக்கரத்தாழ்வார் தனிச்சந்நிதியில் கிழக்கு நோக்கி அருள்புரிகிறார். இவரை சனிக்கிழமை களில் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் சனியின் தாக்கம் குறையும். மேலும், இவரது பின்புறத்தில் ஸ்ரீநரசிம்மர் எழுந்தருளியுள்ளார். ஒரே சமயத்தில் ஸ்ரீசக்கரத்தாழ்வாரையும் ஸ்ரீநரசிம்மரையும் வழிபடுவ தால் சனி அருகே நெருங்க மாட்டார் என்பர். நரசிம்ம  அவதாரத்தினைக் கண்டால் சனி பகவானுக்குப் பயம் என்ற கருத்து நிலவுகிறது.

நாமக்கல் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீஆஞ்சனேயரும், சுசீந்திரம் திருத்தலத்தில்அருள்புரியும் ஸ்ரீ ஆஞ்சனேயரும் மிகவும் உயரமானவர்கள். சக்திவாய்ந்த இவர்களை வழிபட்டால் சனி பகவான் உங்கள் பாதையில் குறுக்கிடமாட்டார். ஏனெனில், விநாயகரை எப்படி சனி பகவானால் பிடிக்க முடியவில்லையோ அதேபோல் ஸ்ரீஆஞ்சனேயரும் சனி பகவானால் பிடிக்க முடியாதவர். எனவே, ஸ்ரீஆஞ்சனேய சுவாமியை வழிபட சனியின் தோஷம் விலகும். திருச்சி ஜங்ஷன் அருகிலுள்ள கல்லுக்குழி என்னுமிடத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீஆஞ்சனேய சுவாமி மிகவும் கீர்த்தி பெற்றவர். மேலும், இக்கோவில் வளாகத்தில் ஸ்ரீசக்கரத்தாழ்வாரும், ஸ்ரீநரசிம்மமூர்த்தியும் அருள்புரிவதால், ஒரே சமயத்தில் இந்த மூர்த்தங்களை வழிபட சனியின் தோஷம் விலகும் என்பர்.

திருச்சியிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது உத்தமர்கோவில். இங்கு அருள் புரியும் சப்தநாதர்களை (சப்தகுருக்கள்) ஒரே சமயத்தில் வழிபடுவதால் சனியின் தாக்கம் நீங்கும். மேலும் இக்கோவிலுக்கு அருகில் தென்பண்டரிபுரம் என்னும் திருத்தலம் (பிச்சாண்டார் கோவில்) உள்ளது. இங்கு ராதா, ருக்மிணி சமேத ஸ்ரீபாண்டுரங்கன் அருள்பாலிக் கிறார். மிகவும் பழமையான இக்கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீபாண்டுரங்கனுக்கு சனிக்கிழமைகளில் அர்ச்சனை செய்து, துளசி மாலை அணிவித்து ஆலிங்கனம் செய்து கொண்டால், சனியின் அனைத்துத் தோஷங்களும் நீங்கும் என்பர். ஆலிங்கனம் என்பது வழிபாடுகள் முடிந்தபின், மூலவரான ஸ்ரீபாண்டு ரங்கனைக் கட்டிப்பிடித்து தழுவிக் கொள்வது ஆகும். அப்போது பகவான் ஸ்ரீபாண்டுரங்கன் நம் துன்பங்களைத் தீர்த்து ஆசீர்வதிப் பதாக நம்பிக்கை. மேலும், நம்முடன் பகவான் நட்புடன் இருப்பதாக ஐதீகம். இங்கு பிரசாதமாகக் கொடுக்கப்படும் “புக்கா பொடி’ என்னும் கருப்பு நிற குங்குமம் மிகவும் சக்திவாய்ந்ததாகக் கருதப் படுகிறது. இதனை சனிக்கிழமை களில் நெற்றியில் இட்டுக்கொண் டால் சனி தூரமாகப் போய்விடுவார்.

குடந்தை மேலக்காவிரி ஆற்றின் தென்கரையில் ஜெய் ஆஞ்சனேயர் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் எழுந்தருளி யுள்ள ஸ்ரீஆஞ்சனேயர், சனி பகவானை தன் காலில் போட்டு மிதித்த படி காட்சி தருகிறார். இந்த ஆஞ்சனேயரை சனிக்கிழமை விரதம் இருந்து நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால், ஸ்ரீஆஞ்சனேயர் அருளுடன் சனியின் தாக்கமும் விலகும்.

மராட்டிய மாநிலம் சிங்கணபுரத்தில் சனி பகவான் வெட்ட வெளியில் உயர்ந்த மேடையில் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். கரிய நிறத்தில் ஐந்தடி ஒன்பது அங்குல உயரமும், ஓரடி ஆறு  அங்குல அகலமும் உடைய கல் பலகைதான் திருமேனி.

இவரை ஆண்கள் மட்டுமே அருகில் சென்று வழிபட வேண்டும். அதுவும் சிவப்பு ஆடை அணிந்திருக்க வேண்டும். பெண்கள் இவரை அருகில் சென்று வழிபட அனுமதிப்பதில்லை. சிறிது தூரத்திலிருந்தே தரிசிக்கலாம். இந்த ஊரினை சனி பகவான் காவல் காக்கிறார் என்பது ஐதீகம். ஆண்கள் காவித்துண்டு, வேட்டி அணிந்து நீராடி, ஈரம் சொட்டச் சொட்ட நடந்து வந்து பீடத்தின் மீதேறி நல்லெண்ணெய் அபிஷேகம் செய்தால், சனியால் ஏற்படும் அனைத்து கோளாறுகளும் குறைவதுடன் சனியின் ஆசியும் கிட்டும் என்பது நம்பிக்கை. இதனால் பதவி உயர்வு, திருமண பாக்கியம், மக்கட்செல்வம் கிட்டும் என்பர்.

புகழ்பெற்ற வைணவத் தலங் களில் தசாவதாரச் சந்நிதி இருக்கும். அங்கு எழுந்தருளியுள்ள கூர்ம
அவதாரத்திற்கு அர்ச்சனை செய்து கற்கண்டு சமர்ப்பித்து வழிபட்டால் சனியின் தொந்தரவு இருக்காது. சனி பகவானை வழிபடும்போது சொல்ல வேண்டிய சுலோகம்:

“விதாய லோஹப்ரதிமாம் நரோதுக் காத் விமுச்யதே பாதாவா அந்ய க்ரஹாணாஞ்சய படேத்திஸ்ய நச்யதி.’

மேலும் சனிக்கிழமைகளில் காக்கைக்கு ஆல இலையில் எள், வெல்லம் கலந்த அன்னம் வைத்தால் சனியின் கெடுபிடி நீங்கும் என்பர்.

நன்றி  Nakkheeran.in 

 

வைகுண்ட சொர்க்கம் வழங்கும் வள்ளல்

 

கோவில் என்பதா, கோயில் என்பதா?
ஒரு ஆலயத்தை கோவில் என்போரும் உண்டு; கோயில் என்போரும் உண்டு. ஆனால் கோயில் என்ற பதம், ‘கோ’ உறைந்திருக்கும் ‘இல்’ என்று பொருள்படுவதாகவேtt பலரும் சொல்வார்கள். அதாவது கோ என்ற மன்னன் குடியிருக்கும் இல், கோயில். தன் மக்களை ஆள்பவன், அவர்கள் நலம் காப்பவன் மன்னன். ஆனால் அகில உலகத்தையும் படைத்து, காத்து அருளும் இறைவனும் மன்னன் போன்றவன்தானே. ஆகவேதான் கோ என்றால் இறை என்றும் ஒtரு பொருள் உண்டு. இந்த இறைவன் உறையும் இல்தான் கோயில்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசாட்சியும் ஆன்மிகமும் ஒன்றையொன்று சார்ந்தேதான் வளர்ந்துள்ளன. எந்தப் பகுதி மன்னராக இருந்தாலும் அவர் தம் குலதெய்வத்தை வணங்கிவிட்டுதான் எந்தச் செயலிலும் ஈடுபடுவார். அன்றாடக் கடமையிலிருந்து, பகைவரைத் தடுக்கும் அல்லது அவர் மீது போர் தொடுக்கும் பெரிய பொறுப்புவரை அவர் இறையருளின் ஆதரவைப் பெறத் தவறியதேயில்லை.
இந்த வகையில் அரசர்கள் தம் இறைவனாருக்கு பிரமாண்டமான கோயில்களை எழுப்பினார்கள். அதன் மதில் சுவர் நெடிதுயர்ந்தது. வானோக்கி நிமிர்ந்த கோபுரங்களுக்குள்ளேயே ஏறி, உச்சிவரை செல்லும் வசதி இருந்தது. கோயிலுக்குள் இறைவன், மன்னனின் விருப்பத்திற்கேற்ற பிற தெய்வங்கள் சந்நதிகளோடு, நெல் சேமித்து வைக்கும் பெரிய மண்டபங்களும் அமைக்கப்பட்டிருந்தன.
பொதுவான இந்த அமைப்பு, எதிரி படையெடுப்பிலிருந்து தன் மக்களைக் காப்பதற்கும் எதிர்தாக்குதல் நடத்துவதற்கும் ஒரு மன்னனுக்கு ஏதுவாக இருந்தது. ஒருவேளை போர் நாள் கணக்கில் நீடிக்குமானால், உள்ளேயே இருக்கும் நெல் சேமிப்பு கிடங்குகள் மக்களின் பசி போக்கத் தயாராக இருந்தன. தன் மக்கள் கோயிலுக்குள் வந்து இறைவனை வணங்குவதோடு, சொற்பொழிவுகளைக் கேட்டு மனத் தூய்மை பெறவும் இசை, நடனம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களால் உற்சாகம் பெறவும் வசதியாக கோயிலின் உள்ளமைப்பை உருவாக்கினான் மன்னன்.
மன்னன் கோயிலை நிர்மாணித்ததில் சுயநலத்தைவிட, பொதுநலத்துக்குதான் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறான். ஓர் உதாரணம்: கோயில் கட்ட தேவைப்படும் மணலை அருகிலேயே, பூமியிலிருந்து தோண்டி எடுத்துக் கொண்டான். இவ்வாறு ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் தோண்டி, மணலை சேகரித்து, கோயிலை உருவாக்கிய மன்னன், தோண்டப்பட்டதால் பெரும் பள்ளமாகிவிட்டிருந்த பகுதியை, அப்படியே விட்டுவிடாமல், அதில் நீர் பாய்ச்சி, குளமாக்கி, மக்கள் குடிநீர், குளிநீர் வசதிகள் பெறவும் வழிவகுத்தான். நாளாவட்டத்தில் அவனுடைய பெருந்தன்மையைப் பாராட்டும் வகையில் மழையும் பொழிந்து குளத்தை நீராலும் மக்கள் மனதை சந்தோஷத்தாலும் நிரந்தரமாக நிரப்பியது.
இப்படி பொது கைங்கர்யம் செய்யும் மன்னனின் சரித்திரம் பெரும்பாலும் ஏதேனும் கல்வெட்டுகளாலோ, அதே கோயிலில் பிரதிஷ்டை செய்யப்படும் மன்னனின் சிலையாலோ அறியப்படுகிறது.
அப்படிப்பட்ட ஒரு கோயில்தான், காஞ்சிபுரத்திலுள்ள 108 திருப்பதிகளில் ஒன்றான வைகுண்டநாதப் பெருமாள் ஆலயம்.
இந்தப் பெருமாளுக்குப் பெருமை சேர்த்தவன் பல்லவ மன்னன். இறையுணர்வை மதித்ததோடு, அதை மக்களுக்கும் பரப்பியதோடு, அவர்களுடைய நல்வாழ்வுக்கு நல்லதோர் காவலனாக இருந்த அரசனின் வம்சம் தழைத்தோங்க வேண்டும் என்பதில் பரந்தாமனுக்கும் அக்கறை இருந்தது.
அதனால்தான் பல்லவ சாம்ராஜ்யத்தில் ஒரு குறிப்பிட்ட தலைமுறையோடு அந்த வம்சமே முற்றுப்பெறப் போகிறது என்பதை உணர்ந்த மாதவன், அந்த மன்னனுடைய ஏக்கத்தைப் போக்கத் தயாராக இருந்தான். இதற்காக பாரத்வாஜ முனிவரைக் கருவியாக்கிக் கொண்டான். அவர் தவத்தில் ஆழ்ந்திருந்தபோது, அந்த தவத்தை ஒரு கந்தர்வப் பெண் மூலம் கலைக்க வைத்தான். தவம் கலைந்த முனிவர் கோபம் கொள்ளாமல் காமம் கொண்டதில், கந்தர்வப் பெண் அவருக்கு ஓர் ஆண் மகவைப் பெற்றுக் கொடுத்துவிட்டு மறைந்தாள். தனிமை வாழ்க்கையை மேற்கொண்டிருந்த முனிவருக்கு இப்போது தம் குழந்தையையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு!
அவருடைய கவலையைத் தீர்க்கும் வகையாக மஹாவிஷ்ணுவும் மஹாலட்சுமியும் வேடர் உருக்கொண்டு, அங்கே வந்து, அவரிடமிருந்து அந்தக் குழந்தையை வாங்கிக்கொண்டு, உரிய காலத்துக்காகக் காத்திருந்தார்கள். மழலைப்பேறு வேண்டி தலந்தோறும் தீர்த்த யாத்திரை செய்து வந்த பல்லவ மன்னன், ஒரு காட்டில் அந்த வேடுவத் தம்பதியிடமிருந்து குழந்தையைப் பெற்றான். அதற்கு பரமேஸ்வரவர்மன் என்று பெயர் சூட்டினான். குலம் தழைக்க வந்த குழவியை சீராட்டிப் பாராட்டி வளர்த்தான்.
இந்தப் பரமேஸ்வரவர்மன் திருமால் மீது ஆழ்ந்த பக்தி கொண்டான். அவனுக்கு பெருமாள் 18 கலைகளை போதித்தார். அவ்வாறு அவர் நின்ற கோலத்திலும் அமர்ந்த கோலத்திலும் கிடந்த கோலத்திலும் போதித்த அந்தக் கலைகளில் பெரிய தேர்ச்சி பெற்ற மன்னன், அதற்கு நன்றிக் கடனாக தான் பெருமாளை தரிசித்த கோலங்களிலேயே அவருக்கு அர்ச்சாவதாரங்கள் உருவாக்கி, கோயிலையும் நிர்மாணித்தான். அவர்தான் வைகுண்ட நாதன் என்ற, பரமேஸ்வரன். கோயில் அமைந்த தலம் பரமேஸ்வர விண்ணகரம் (பரமேச்சுர விண்ணகரம்) என்றாயிற்று.
பல்லவ சிற்பக் கலையின் சிறப்பம்சங்களை கோயிலின் ஒவ்வொரு அங்குலத்திலும் காண முடிகிறது. மன்னன் தரிசித்த பெருமாளை அதே அற்புத கோலங்களில் நாமும் காண முடிகிறது. மூன்றடுக்குகள் கொண்ட அழகிய கோயில் இது. கீழ் அடுக்கில் பெருமாள் வீற்றிருந்த நிலையில் சேவை சாதிக்கிறார்; நடு அடுக்கில் அனந்த சயனராகவும், மேல் அடுக்கில் நின்ற கோலத்திலும் அருள்மழை பொழிகிறார்.
இந்த மூன்று சிலைகளும் வித்தியாசமானவை. அதாவது கீழ், நடு அடுக்குகளில் உள்ள சிலைகள் கற்களாலும், மேல் அடுக்கில் உள்ளது சுதை சிற்பமாகவும் காணப்படுகின்றன. பல்லவர் காலத்திலேயே பெருமழை அழைத்து வந்த பேரிடி காரணமாக மேல் அடுக்கில் நின்றிருந்த பெருமாள் சிலை சிதிலமடைந்ததாகவும் அதற்கு மாற்றாக சுதை சிற்பம் அமைக்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.
கோயிலுக்கு ராஜகோபுரம் இல்லை. ஐரம்மத தீர்த்தம் என்ற திருக்குளம் வறண்டு காணப்படுகிறது.
ஆனால், கோயிலினுள் அழகிய, மணம் கமழும் நந்தவனம் பசுமையாய் உயிர்த்திருக்கிறது. பச்சைப் புல்வெளி கோயிலைச் சுற்றி அமைந்து அந்த பச்சைமா மலைபோல் மேனியனுக்கு வந்தனம் சொல்லுகிறது. அரசும் வேம்பும் பிணைந்து உயர்ந்து நிற்கின்றன. அதனடியில் ஆதிசேஷன் குடைபிடிக்க, பெருமாள் சிறு உருவினராகக் காட்சி தருகிறார். அவருக்கு அருகே பல நாகர்கள், மஞ்சள்&குங்குமப் பொட்டுகளில் பொலிகிறார்கள்.
கோயிலினுள் நுழைந்தால் ஒரு கணம், சென்னையை அடுத்த மகாபலிபுரத்திற்குதான் வந்திருக்கிறோமோ என்ற பிரமிப்பு ஐயம் எழுகிறது. கோயிலின் உட்புறச் சுவர்களில் வரிசையாக சுதை சிற்பங்கள். ஒவ்வொரு சிற்பமும் பல்லவ சரித்திரத்தை ஆன்மிகப் பின்னணியோடு விவரிக்கிறது. பல்லவ கலைத் திறனைப் பறைசாற்றுவதுபோல, இத்தலத்திலுள்ள மூலவர், அவரைச் சுற்றியுள்ள பிராகாரம், அவற்றைத் தாங்கியிருக்கும் தூண்கள் எல்லாம் ஒரே பெரிய பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்டவை என்றறியும்போது பிரமிப்பு மேலும் கூடுகிறது.
பல்லவ மன்னன் பரமேஸ்வரவர்மன் தன் ஒவ்வொரு நடவடிக்கையையும் இந்த வைகுண்டநாதப் பெருமாளின் ஆசியுடனேயே நிறைவேற்றி வந்திருக்கிறான். அன்றாடக் கடமை முதல் போர் தொடுப்பதுவரை எல்லாம் அவரது ஆசித் துணையுடன்தான். அந்த வகையில் அவன் பாண்டிய மன்னனை வென்றதை திருமங்கையாழ்வார்,
தேர்மன்னு தென்னவனை முனையில் செறுவில்
திறல் வாட்டிய திண் சிலையோன்
பார் மன்னு பல்லவர் கோன் பணிந்துவரும் & பர
மேச்சுர விண்ணக ரமதுவே
&என்று சிறப்பிக்கிறார்.
பரமேஸ்வரவர்மனின் பிறப்பு, அவனுக்குப் பெருமாள் அருங்கலைகளையும் சாஸ்திரங்களையும் போதித்த சம்பவங்களை உள் பிராகாரத்தில் சிற்பங்களாகப் பார்த்து, தல புராணத்தை, காட்சி வடிவமாகவே காண முடிகிறது.
இந்த சிற்பங்களையும், அவற்றின் தொன்மை, அவை விவரிக்கும் சரித்திர, புராண சம்பவங்களை ஆராய்ந்து மகிழ்ந்தவர்களில் டெனிஸ் ஹட்ஸன் என்ற ஆங்கிலேயரும் ஒருவர். புற்று நோயால் சுமார் ஒன்பது வருடங்கள் இவர் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அதையும் பொருட்படுத்தாமல், இதே கோயிலில் பல ஆராய்ச்சிகளை அவர் மேற்கொண்டதாகவும் அந்த ஆராய்ச்சியின் பலனாக 600 பக்கங்கள் கொண்ட பல்லவா ஹிஸ்டரி & வைகுண்ட பெருமாள் என்ற புத்தகத்தை எழுதியதாகவும் சொல்லப்படுகிறது. 1972 முதல் 2002வரை 30 ஆண்டுகளை அவர் இந்த ஆராய்ச்சியில் செலவிட்டாராம். அந்தப் புத்தகத்தில் பரமேச்சுர விண்ணகரம் என்ற இந்தக் கோயில் மட்டுமல்லாமல், சற்றுத் தொலைவில் இருக்கும் கயிலாயநாதர் கோயில் பற்றிய விவரங்களும் அடங்கியிருக்கின்றன.
கோயிலின் மேல் தளத்தில் மேலும் சில புராண சம்பவங்கள் சிற்பமாக நின்று கதை சொல்கின்றன. மூன்று அவதாரங்கள் நிறைவேற்றிய மூன்று வதங்கள், இரண்யனைக் கிழித்துப் போட்ட நரசிம்மர், நரகாசுரனை வதைத்த கிருஷ்ணர், வாலியைக் கொன்ற ராமர் என்று மூன்று சம்பவங்களும் மிக நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளன.
மன்னர் கிருஷ்ண தேவராயருக்கும் ஒரு சிலை இங்கே உள்ளது. இத்தலத்திற்கு அவர் ஆற்றிய பணிகளின் அங்கீகாரம் அது. இரண்டு மண்டபங்கள் இந்தக் கோயிலில் தனித்துத் தெரிகின்றன. இப்போது வெறும் மண்டபங்களாக விளங்கும் அவை, பல்லவர் காலத்தில் நடன நிகழ்ச்சிகள் இங்கே நடைபெற்று மன்னர் குடும்பத்தாரையும் குடிமக்களையும் மகிழ்வித்திருக்கின்றன.
மேற்கு நோக்கி வீற்றிருக்கும் வைகுண்டநாதப் பெருமாளே இங்கே கருவறை தெய்வம். இவர் பரமபதநாதன் என்றும் அழைக்கப்படுகிறார். தன்னைத் தொழுவோருக்கு வைகுண்ட சொர்க்கத்தை இம்மையிலேயே காட்டும் இந்த அருளாளர், அழகாகப் புன்னகைக்கிறார். அந்த மெல்லியப் புன்னகையே எல்லா துயரங்களையும் விரட்டி விடுகிறது.
தாயார் வைகுந்தவல்லி. பெயரளவில் வைகுந்தத்தின் அரசியாக இருந்தாலும் பிரபஞ்சத்தையே ஆட்சி செய்யும் அற்புதத் தாய் இவர். கணவரது பராமரிப்பில் யாரையும் விட்டுவிடக் கூடாதே என்ற தாய்மைப் பரிதவிப்பு அந்தக் கண்களில் தெரிகிறது. அப்படியே விட்டுப் போவதுபோலத் தோன்றினாலும் உடனே எடுத்துச் சொல்லி, எந்த உயிரும் எந்தத் துன்பமும் அடைந்துவிடாதபடி சாலப் பரிந்து பாதுகாக்கும் கருணையும் கூடவே தெரிகிறது.
இந்தக் கோயிலிலிருந்து மாமல்லபுரத்துக்கும் இடையே சுரங்கப் பாதை இருந்ததாகச் சொல்கிறார்கள். குதிரைகள் பூட்டிய தேரில் மன்னன் இவ்விரு தலங்களுக்கும் இந்தப் பாதை வழியாகச் சென்று வருவான் என்றும் அறியும்போது வியப்பு எல்லை மீறுகிறது. அதேபோல இந்தக் கோயிலுக்கும் கயிலாயநாதர் கோயிலுக்கும் இடையேயும் சுரங்கப் பாதை இருந்திருக்கிறது.
இவை மட்டுமல்ல மூலவர் சந்நதிக்கும், முன்மண்டபத்துக்கும் இடையேயும் ஒரு சுரங்கப் பாதை இருந்திருக்கிறது. இந்த விவரத்தைக் கேள்விப்பட்ட, அப்போது ஆட்சியிலிருந்த ஆங்கிலேயர் அதனைத் தோண்டிப் பார்க்க முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் ஊர் பொதுமக்களும் இந்த இறைவன் மீது அன்பு கொண்டிருந்த அலி முகம்மது கான் என்ற முகமதியப் பெரியவரும் அதை அனுமதிக்க விரும்பவில்லை. உடனே சுரங்கப் பாதை ஆரம்பிக்கும் இடத்தில் அந்த வாசலை மூடியபடி படிகள் எழுப்பி, மூலவர் சந்நதிக்குப் போகும் வழியாக மாற்றிவிட்டார்கள். அந்தக் கல் பாலத்தை இன்றும் காணலாம். படிகளைப் பார்த்த ஆங்கிலேயர், பூமிக்குக் கீழிறங்கிச் செல்ல முடியும் என்று நினைத்தால், மேலே படியேறி பெருமாளை சேவிக்க வேண்டியிருக்கிறதே என்று ஏமாற்றமடைந்தனர்.
பெருமாளை தரிசித்த பின்னர், பிரசாதமாக அவல்&கல்கண்டு தருகிறார்கள். அதாவது குசேலனாக வருபவர்களும், அவல் போன்ற எளிய நிவேதனம் அளித்தாலும், அதனுடன், இனிமையான கல்கண்டு என்ற வளமான வாழ்வை இந்த வைகுண்டநாதப் பெருமாள் அருள்வான் என்பது உட்பொருள்.
படங்கள்: பாஸ்கர், எம்.என்.எஸ்.
அடுத்த தரிசனம்: சொன்னவண்ணம் செய்த பெருமாள்

ஐப்பசி சதய நாள்தான் ராஜராஜசோழன் பிறந்தநாள். சிவபாத சேகரனான ராஜராஜசோழன் ஒப்பற்ற பெருங்கோவிலாக விளங்கும் தஞ்சைப் பெருவுடையார் கோவிலை எழுப்பித்து பெரும் புகழ் பெற்றான். ஆயிரம் ஆண்டுகள் நிறைவு பெற்ற தஞ்சை பெரிய கோவில் அவனது புகழைப் பறைசாற்றுகின்றது. சோழர் வரலாற்றி லேயே பொற்காலம் படைத்தவன் ராஜராஜசோழன். இவன் இராஜசேகரி என்ற பெயருடன் மேலும் 42 சிறப்புப் பெயர்களையும் பெற்றவன்.

இரண்டாம் பராந்தக சோழனுக்கும், வானவன் மாதேவிக்கும் பிறந்தவன் ராஜராஜன். தமக்கை பெயர் குந்தவை. பட்டத்தரசி உலகமாதேவி. மகன் இராஜேந்திரன். ராஜராஜன் தன் மகனுடன் இணைந்து 1012 முதல் 1014 வரை ஆட்சி புரிந்தவன். இப்படி தந்தை- மகன் ஒற்றுமையாய் ஆட்சி புரிந்தவர்கள் இவர்கள் மட்டுமே.

நம்பியாண்டார் நம்பியுடன் திருமுறைகளைத் தொகுத்ததால் திருமுறை கண்ட சோழன் என்ற சிறப்புப் பட்டமும் பெற்றவன் ராஜராஜன். இவன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் உண்மையிலேயே பெருங்கோவில்தான். இது ஒரு கலைப் பொக்கிஷம்.

தஞ்சை பெருவுடையார் கோவில் கி.பி. 1010-ஆம் ஆண்டில் கட்டப் பட்டது. வரலாறு, கல்வெட்டியல், அரசியல், கட்டடம், சிற்பம், ஓவியம், நடனம், இசை ஆகிய கலைகளுடன் சமுதாயம், பண்பியல், இறைக்கொள்கை ஆகியவற்றையும் எடுத்து இயம்பும்படியாக இவ்வாலயத்தை திறம்பட கட்டியுள்ளான் ராஜராஜ சோழன். இந்தியாவின் புகழ்பெற்ற ஒரே கல்லாலான பெரிய நந்தியும் இங்குள்ளது இன்னும் சிறப்பு.

யுனெஸ்கோ நிறுவனம் 1987-ல் தஞ்சைப் பெரிய கோவிலை உலக பாரம்பரிய சின்னங் களில் ஒன்றாக அறிவித்தது. இங்குள்ள அறிவியல், கலை மற்றும் பண்பாட்டு மரபியல், சிற்பம் போன்றவற்றைக் கண்டறிந்து இதை வெளியிட்டது.  உலக நாடுகளுக்கும் அறிவிப்பு கொடுத்தது.

அதாவது எதிர்காலத்தில் உலகப் போர் மூண்டாலும் இக்கோவில்மீது எந்த தாக்குத லும் எந்த நாடும் நடத்தக்கூடாது; சேதப் படுத்தக்கூடாது எனவும் அறிவித்தது. இது உலக அரங்கில் தமிழனின் பாரம்பரிய சிறப்புக்குக் கிடைத்த மாபெரும் கௌரவ மாகும். இத்தகைய புகழை தமிழகத்துக்குத் தந்தவன் இராஜராஜசோழன்.

பெரிய கோவிலில் ஐப்பசி சதய நாளான ராஜராஜன் பிறந்தநாளை 12 நாட்கள் வெகுகோலாகலமாகக் கொண்டாடி வந்தான் அன்று. அதையே இன்றும் கொண்டாடுகின் றனர். இம்மன்னன் தன் பிறந்தநாளைக் கொண்டாட பல திருக்கோவில்களுக்கும் சிறப்பு வழிபாடுகள் செய்ய பொருள் கொடுத்துள்ளான்.

திருவையாறு, திருவெண்காடு, திருப் புகலூர், திருவிடந்தை, பாச்சூர், திருநந்திக் கரை போன்ற கோவில்கள் அதில் முக்கியமானவை.

இவன் ஆட்சிக்காலத்தில்தான் முதன் முதலாக சோழப் பேரரசுக்கு உட்பட்ட நிலப்பகுதி முழுமையும் சீராக அளக்கப் பட்டது. தேவாரப் பதிகங்கள் சிவாலயங் களில் தினமும் ஓத ஏற்பாடுகள் செய்து சிவபாத சேகரன் எனப் புகழப்பட்டான். அது முதல் இன்றளவும் ஓதுவார்கள் ஆலயங்களில் தேவாரம் ஓதுகின்றனர்.

இவ்வாண்டு ராஜராஜனின் பிறந்தநாள் விழா 5-11-2011-ல் கொண்டாடப்படுகின்றது.

சூரசம்ஹாரம்

சூரசம்ஹாரம்
சிங்கார வேலனாக சிக்கலில் வேல் வாங்கிய முருகப்பெருமான், சூரபத்மனை அழிப்பதற்காக போருக்கு கிளம்புகிறார். அலைபாயும் செந்திலம்பதியாகிய திருச்செந்தூரில் இவ்விழா சீரும் சிறப்புமாக நடத்தப்படும். அந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி நின்று “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” என்று கோஷமிடும் ஒலி விண்ணை பிளக்கும்.
அருள் வடிவான முருகனுக்கு சூரனை வதைக்க மனமில்லை. அதனால், வீரபாகு தலைமையிலான நவவீரர்களை தூது அனுப்பினார். தேவர்களை சிறையிலிருந்து விடுவிக்கும்படி அறிவுரை கூறினார் வீரபாகு. சூரனோ ஆணவம் என்னும் பேரிருள் வடிவம் கொண்டு யாவரையும் அழிக்க எண்ணினான்.
சூரபத்மனின் பிள்ளைகளாகிய பானுகோபன், அக்னி முகாசுரன், தம்பிகளான பானுகோபன், வரத்தினால் பெற்ற இந்திர ஞாலத்தேர், சிங்கவாகனம், சேனைகள் அனைத்தையும் சூரபத்மன் இழந்தான். இறுதியில் மாயப்போர் முறைகளை செய்ய தொடங்கினான். கடலில் சென்று உலகமெல்லாம் நிலை குலையும் வகையில் பெரிய மாமரமாக நின்றான்.
வீறுகொண்டு எழுந்த முருகன் வேலாயுதத்தை ஏவி விட்டார். அம்மாமரம் இரு கூறாக சிதைந்தது. ஒரு பாதியை மயிலாகவும், மறு பாதியை சேவலாகவும் மாற்றி ஏற்றுக்கொண்டார். முருக தத்துவத்திற்கு சிறப்பான தனித்தன்மை உண்டு. சூரசம்ஹாரம் என்றால் அசுரனாகிய சூரபத்மனை முருகப்பெருமான் கொன்றார் என்று பொருள் கொள்ளக்கூடாது.
உண்மையில் சூரனையும் ஆட்கொண்டு பெருவாழ்வு தந்தருள்கிறார். எந்த தெய்வத்திற்கும் இல்லாத சிறப்பு இதுவாகும். அதனால் தான் “வைதாரையும் வாழவைப்பவன் முருகன்” என்று போற்றி வழிபடுவர். கந்தசஷ்டியின் ஆறாம் நாளான இன்று நம் மனதில் இருக்கும் ஆணவத்தையும், அசுர எண்ணங்களையும் விடுத்து, நல்ல எண்ணம் என்னும் மயிலாக மாறி ஆறுமுகப்பெருமானை தாங்கி மகிழ்வோம்.
முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் வென்று ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. அதே சமயம் இவ்விழாவிற்கு வேறு காரணங்களும் இருப்பதாக மகாபாரதம், கந்தபுராணம் கூறுகிறது. முனிவர்கள், ஒரு ஐப்பசி மாத அமாவாசை தினத்தன்று வேள்வி வளர்த்து யாகம் தொடங்கினர்.
ஆறு நாட்கள் நடந்த அந்த யாக குண்டத்தில் எழுந்த தீயில் இருந்து, ஒவ்வொரு நாளும் ஒரு வித்து வீதமாக ஆறு வித்துக்கள் சேகரிக்கப்பட்டன. அந்த வித்துக்கள் ஆறாம் நாளில் ஒன்றாக சேர்ந்து முருகப்பெருமான் அவதரித்தார். இவ்வாறு முருகன் அவதரித்த நாள் கந்தசஷ்டி என மகாபாரதம் கூறுகிறது.
கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார், தேவர்கள் ஐப்பசி மாத வளர்பிறையில் முதல் ஆறுநாட்கள் கும்பத்தில் முருகனை எழுந்தருள செய்து அசுரர்களை வதம் செய்வதற்காகவும், அவரது அருள் வேண்டியும் நோன்பு இருந்தனர். முருகனும் அவர்களுக்கு அருள் செய்தார். இதனை நினைவுறுத்தும் விதமாகவே ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது என்கிறார்.
12 நாள் விழா…….
முருக ஸ்தலங்களில் கந்தசஷ்டி விழா ஆறு நாட்களே நடக்கும். சில ஸ்தலங்களில் சஷ்டிக்கு மறுநாள் முருகன் திருக்கல்யாணத்துடன் சேர்ந்து ஏழு நாட்கள் நடத்துவர். ஆனால், திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழாவை 12 நாட்கள் கொண்டாடுகின்றனர். முதல் ஆறு நாட்களில் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம், கோலத்தில் ஊஞ்சல் சேவை ஆகியன நடக்கும்.
சஷ்டி யாகம்……..
திருச்செந்தூரில் ஐப்பசி மாத அமாவாசைக்கு மறுநாள் அதிகாலையில் மூலஸ்தானத்தின் பின்புறத்தில் வள்ளி, தெய்வானை சன்னதிகளுக்கு நடுவே உள்ள ஹோம மண்டபத்திற்கு மூலவரின் பிரதிநிதியாக வள்ளி, தெய்வானையுடன் ஜெயந்திநாதர் (முருகன்) எழுந்தருளுகிறார். ஆறுகோண வடிவில் அமைக்கப்பட்ட ஹோம குண்டத்தில் யாகம் தொடங்கும்.
குண்டத்தை சுற்றிலும் சிவன், அம்பிகை, நான்கு வேதங்கள், முருகன், வள்ளி, தெய்வானை, மகாவிஷ்ணு, விநாயகர், சப்தகுரு, வாஸ்து பிரம்மா, தேவர்கள், சூரியன், அஷ்ட திக்பாலகர்கள், துவாரபாலகர்கள் என அனைத்து தேவதைகளையும் கும்பத்தில் எழுந்தருளச் செய்கின்றனர். தினமும் உச்சிக்காலத்தில் யாகசாலை பூஜை முடிந்தவுடன் ஜெயந்திநாதர், சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார்.
ஆறாம் நாளன்று சூரசம்ஹாரம் செய்வதற்காக வள்ளி, தெய்வானை இல்லாமல் தனித்து கடற்கரைக்கு எழுந்தருளுகிறார். சம்ஹாரம் முடிந்த பின், வெற்றி வேந்தராக வள்ளி, தெய்வானையுடன் யாகசாலைக்கு திரும்புகிறார்
மும்மூர்த்தி முருகன்…..
முருகப்பெருமான் சிவபெருமானின் அம்சமாக அவதரித்தவர். ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை தந்தைக்கே குருவாக இருந்து உபதேசித்தவர். அதே மந்திரத்தின் பொருள் தெரியாத பிரம்மாவை, சிறையில் அடைத்தவர். சூரனை சம்ஹாரம் செய்து, பின் மகாவிஷ்ணுவின் மகளை மணந்து கொண்டவர். மாமனான மகாவிஷ்ணுவின் பாசத்திற்கு கட்டுப்பட்டவர்.
இவ்வாறு முருகன், மும்மூர்த்திகளாகவும் திகழ்கிறார். இதனை உணர்த்தும் விதமாக திருச்செந்தூரில் முருகப்பெருமான், ஆவணி, மாசி மாத திருவிழாவின் போது சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார். விழாவின் 7-ம் நாளன்று மாலையில் இவர் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி சிவபெருமானாக காட்சி தருகிறார்.
மறுநாள் (8-ம் நாள்)அதிகாலையில் இவர் வெண்ணிற ஆடையில் பிரம்மாவின் அம்சமாக அருளுகிறார். மதிய வேளையில் பச்சை வஸ்திரம் சாத்தி பெருமாள் அம்சத்தில் காட்சியளிக்கிறார். வள்ளி குகையில் மும்மூர்த்தி சிலை மூன்று முகங்களுடன் இருக்கிறது.
கண்ணாடிக்கு அபிஷேகம்…..
ஜெயந்திரநாதர், சூரனை சம்ஹாரம் செய்த பின்பு பிரகாரத்திலுள்ள மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருளுகிறார். அப்போது சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்படுகிறது. அர்ச்சகர் கண்ணாடியில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்கிறார். இதை சாயாபிஷேகம் என்பர்.
சாயா என்றால் நிழல் எனப்பொருள். போரில் வெற்றி பெற்ற தன்னை குளிர்விக்கும் விதமாக நடத்தும் அபிஷேகத்தை முருகப்பெருமானே கண்டு மகிழ்வதாக ஐதீகம். அதன்பின்பு சுவாமி, தன் சன்னதிக்கு திரும்புகிறார். அத்துடன் சூரசம்ஹாரம் நிறைவடைகிறது.
தெய்வானை திருக்கல்யாணம்……..
சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் (ஏழாவது நாள்) முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அசுரனை எதிர்த்து வெற்றி பெற்றதற்காக இந்திரன், தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து தந்ததோடு தேவமயிலாகவும் மாறி சேவை செய்தார். இவர்களது திருமணம் முதல்படைவீடான திருப்பரங்குன்றத்தில் நடந்தது.
சூரனை ஆட்கொண்ட தலம் என்பதால் திருச்செந்தூரிலும் கந்தசஷ்டிக்கு மறுநாள் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று காலையில் தெய்வானை தவம் செய்வதற்கு தபசு மண்டபத்திற்கு செல்கிறாள். முருகனை திருமணம் செய்வதற்காக தவம் இருக்கிறாள்.
மாலையில் குமரவிடங்கர், சண்முகப்பெருமானின் பிரதிநிதியாக தபசு மண்டபத்திற்கு மயில் வாகனத்தில் சென்று தெய்வானைக்கு அருள் பாலித்து, மாலை சூட்டி நிச்சயதார்த்தம் செய்கிறார். நள்ளிரவில் இருவரும் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருள அங்கு திருமணம் நடக்கிறது. மறுநாள் சுவாமி தெய்வானையுடன் வீதி உலா செல்கிறார்.
அடுத்த மூன்று நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சலில் காட்சி தருகிறார். 12-ம் நாளன்று மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது. அப்போது சுவாமி, அம்பாள் வீதி உலா செல்லும் போது, பக்தர்கள் மஞ்சள் நீர் ஊற்றி சுவாமியை குளிர்ச்சி படுத்துகின்றனர்.
குரு பெயர்ச்சி……
திருச்செந்தூரில் முருகன் ஞானகுருவாக அருளுகிறார். அசுரர்களை அழிக்கும் முன்பு, சண்முகர் சன்னதி எதிரே உள்ள பீடத்தில் வைத்து குருபகவான் முருகனுக்கு அசுரர்களை பற்றிய வரலாறை கூறினார். எனவே இத்தலம் குருதலம் என்கிறார்கள். பிரகாரத்தில் உள்ள மேதா தெட்சிணாமூர்த்தி கூர்மம்.
அஷ்ட நாகங்கள் மற்றும் அஷ்ட யானைகள், மேதா மலை என மூன்று ஆசனத்தின் மீது அமர்ந்திருக்கிறார். இவருக்கு பின்புறம் உள்ள கல்லால மரத்தில் 4 வேதங்களும், 4 கிளிகள் வடிவில் இருக்கின்றன. இவர் அறிவு, ஞானம் தரும் மூர்த்தியாக அருளுவதால் ஞானஸ்கந்த மூர்த்தி என்றும் அழைக்கிறார்கள்.
வழக்கமாக இடது கையில் அக்னியும், வலது கையில் உடுக்கையும் வைத்திருக்கும் தட்சிணாமூர்த்தி இங்கு வலது கையில் மழுவும், இடக்கையில் மானும் வைத்தபடி காட்சி தருகிறார். நவம்பர் 21-ல் நடக்கும் குரு பெயர்ச்சியன்று திருச்செந்தூர் முருகனை வணங்கினால், நன்மை நடக்கும்.
இரண்டு வடிவங்களில் முருகன் சூரனை சம்ஹாரம் செய்வதற்கு வந்த முருகன், சுப்பிரமணியாக நான்கு கரங்களுடன் மூலஸ்தானத்தில் அருளுகிறார். இவர் சிவனை வணங்கியபடி, தவக்கோலத்தில் உள்ளார். தவிர சண்முகர், பிரதான உற்சவமூர்த்தியாக தெற்கு நோக்கி தனி சன்னதியில் இருக்கிறார்.
இவருக்கு மூலவருக்குரிய மரியாதை அனைத்தும் செய்யப்படுகிறது. திருமணத்தடை உள்ளவர்கள் இவரிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். இவரை சுற்றிவர பிரகாரம் இருக்கிறது. ஆனால் மூலவரின் தவம் கலைந்து விடக்கூடாது என்பதால் சுற்றி வருவது இல்லை.
அன்று பாட வேண்டிய பாடல்………..
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

திருநீற்று மகிமை

“மந்திரமாவது நீறு…..,

 ”மந்திரமாவது நீறு…..,
வானவர் மேலது நீறு……”
சமயச் சின்னங்களில், திருநீறு அணியக் கூடியது என்பது புனித மான ஒன்று. தொன்று தொட்டு வரும் தமிழரின் ஆதிச் சமயமான சிவசக்தியை வழிபடும் சைவ சமயத்தில் திறுநீறு அணிவது மிகப்புனிதமான செயலாகக் கருதப்படுகின்றது. மகிமை யுணர்ந்து பக்தியுடன் அணியப்படும் திருநீறு தீராத வியாதியையும் தீர்க்கும் சக்தி கொண்டதாகும். எத்தனையோ மூலிகைகளாலும் குணப்படுத்த முடியாமல் துன்புற்ற கூன்பாண்டியனின் வெப்பு நோயினை, திருஞான சம்பந்தர் ஒரு பிடி திருநீற்றினால் குணப்படுத்தி னார். இந்தச் சம்பவம் ஒன்றே திருநீற்றின் உன்னதத் தன் மையை விளக்கப் போதுமானது.
தலை குளித்தபின் நெற்றி நிறைய திருநீற்றை அணிந்து கொண்டால் சளி பிடிக்காது என்பது அனுபவப் பூர்வமான உண்மை. தலைவலி ஏற்படும் போது நீரில் குழைத்து திரு நீற்றைப் பூசினால் தலைவலி பறந்துவிடும். “”மன உளைச் சல், மனச் சஞ்சலம், மன அழுத்தம் போன்ற சமயங் களில் கை,கால்களைக் கழுவி விட்டு நெற்றிநிறையத் திருநீறு பூசிக் கொண்டால் வந்த சஞ் சலங்கள் மறைந்து, இனம் புரியாத அமைதியில் மனம் திளைக்கும்” என்பது சித்தர்களின் அருள் வாக்காகும். இவைகளைத் தவிர ஆன்மிகத் துறையில் திருநீறு அணிவதற்கு ஆயிரக்கணக்கான பயன்கள் சொல்லப்பட்டிக்கின்றன.
நம் தமிழகத்திற்கே உரியதான “”சித்தாந்தம்” என்னும் மரபு வகுத்த விதிமுறைகளின்படி திருநீற்றினை அணிந்தால் கோடிபுண்ணியமும், முக்திப் பேறும் கிடைக்கும் என் பது உறுதி.
தாலமி என்ற வெளிநாட்டு பயணி கி.பி. 150இல் தமிழகத்திற்கு வந்தபோது அவரால் தமிழகத் தில் திருநீறு அணியாத நெற்றியை பார்க்கவே முடியவில்லை என்று எழுதியுள்ளார். திரு நீற்றின் மகிமையை உணர்ந்து தான் அந்தக் காலத்தில் அனைவரும் தவறா மல் திருநீறு அணிந்துள்ளனர். நம் முன்னோர்கள் அணிந்தபடி திருநீறை முறைப் படி அணிய வேண்டியது அவசியமாகும்.
திருநீறை வடக்குமுகமாகவோ, கிழக்கு முகமா கவோ இருந்து அணிய வேண்டும். திருநீறு பூசும் போது அண்ணாந்து கொண்டு வலது கையின் (சிறுவிரல் பெருவிரல் தவிர) மூன்று விரல்களா லும் அணிய வேண்டும். அவ் வாறு அணியும் போது திரு நீற்றுத் துகள்கள் தோளில் படும். இந்தத் துகள்கள் இயல்பாகவே, நம்மைச் சுற்றி ஆன்மிக அலை களை உருவாக்கிவிடும். இவ் வாறு அணியச் சொல்வதற்கு வேறு ஒரு காரணமும் உண்டு. திருநீற்றைக் கீழே சிந்தக் கூடாது என்பதுதான் அந்தக் காரணம் ஆகும். திரு நீறினை கிழே சிந்துவது மகாபாவம். தவறுதலா கக் கிழே சிந்தினால் சிந்திய திருநீற்றினை எடுத்து விட்டு, உடனே அந்த இடத்தைச் சுத்தம் செய்யவேண்டும். ஏனெ னில் திருநீறு சிந்திய இடத் தினை மிதிப்பதைச் “சித் தாந்தங்கள்’ தீராத பாவம் என்கின்றன.

 

சிவலயம்

sample

நெல்லைக் குத்தினால் உடலைப் போஷிக் கும் சத்தான அவல் கிடைக்கும். அவலை உணவாக்கி இந்த உடலின் ஆயுளை நீட்டலாம். அதேபோல் நம் மனமென்னும் நெல்லைக் குத்தி சீராக்கினால், நம்முள் சிவலயம் உண்டாகி, ஆத்ம மேம்பாட்டிற்கான உன்னத வழி நமக்குள் உருவாகும் மனம் ஒரு முரண்டு பிடிக்கும் குரங்கு. “செய்யாதே’ என்றால் செய்யத் துடிக்கும்; “சாப்பிடு’ என்றால், “பசியில்லை’ என்று சொல்லும்; “உட்காரு’ என்றால், “பரவாயில்லை நிற்கிறேன்’ என்று சொல்லும். இப்படி சஞ்சலமும் சபலமும் கொண்ட மனதை அந்த சிவபெருமானாலேயே கடைத்தேற்ற முடியும்.

மாதுளையில் வீற்றிருக்கும் மகேசனே! உம் கருணையினால் மனமதைச் செம்மையாக்கி செழிப்பாய் வாழ முனைகிறோம் ஐயனே! உம் அருள்பெற்ற மாணிக்க வாசகரைப்போல் உம்மையே நினைக்கும் மனதை எமக்கும் தாரும் ஐயா!

கீழ்வேளூர் சிவத்தலத்தில் வீற்றிருக்கும் சிவனே! உம் திருவடி சரணமே இப்பிறவி யின் பயனாம்! பெருமான் உறைந்த மாதுளையை மருந்தாக்கி மக்கள் பிணி தீர்க்க முனைகிறோம் இறைவா!

விடாத இருமல் தீர…

உலர்ந்த மாதுளம்பூ மொட்டு, சுக்கு, சித்தரத்தை, அதிமதுரம், காய்ந்த திராட்சை, தனியா ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் எடுத்து ஒன்றாக்கித் தூள் செய்துகொள்ளவும். இதில் ஒரு தேக்கரண்டி எடுத்து இரண்டு டம்ளர் நீர் சேர்த்துக் கொதிக்க வைத்து, பாதியாகச் சுண்டச் செய்து வடிகட்டவும். இதில் பனங்கற்கண்டு சேர்த்து காலை- மாலை இருவேளையும் சாப்பிட்டு வந்தால் எப்பேர்ப் பட்ட இருமலும் தீரும். சிலருக்கு குடற்புண் உண்டாகி, அதனால் தொண்டைக்கட்டு, இருமல் உண்டாகும். மேற்கண்ட கஷாயம் இப்பிரச்சினைக்கும் நல் மருந்தாய் அமையும்.

வயிற்றுப்போக்கை நிறுத்த…

ஒரு மாதுளம்பிஞ்சு, அதிவிடயம், கோரைக் கிழங்கு, விளாம்பழ ஓடு, சுண்டைக்காய், கசகசா, மாம்பருப்பு ஆகியவை வகைக்கு ஐந்து கிராம் எடுத்து அரைத்து, கட்டித் தயிரில் நெல்லிக்காய் அளவு கலந்து சாப்பிட எப்பேர்ப்பட்ட வயிற்றுப்போக்கும் நொடியில் விலகும்.

மூக்கிலிருந்து ரத்தம் வடிதல் தீர…

மாதுளம்பூ, மாசிக்காய், அருகம்புல் ஆகிய மூன்றையும் வகைக்கு பத்து கிராம் எடுத்து கஷாயமிட்டு, பாதியாகச் சுண்டச் செய்து சாப்பிட, மூக்கிலிருந்து அடிக்கடி உண்டாகும் ரத்தப்போக்கு சரியாகும்.

பற்களைப் பற்றிய வியாதிகள் தீர…

மாதுளை துளிர், மாதுளம் மொட்டு, மாதுளம்பூ, மாதுளம்பிஞ்சு, மாதுளை ஓடு, ஆலம்பட்டை, அரசம்பட்டை, மருதம்பட்டை, கருவேலம்பட்டை, மாசிக்காய், கடுக்காய், இந்துப்பு ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் சேகரித்து தூள் செய்து, இத்துடன் 20 கிராம் அளவு பச்சைக் கற்பூரத்தையும் தூள் செய்து கலந்து வைத்துக்கொள்ளவும். இந்தப் பற்பொடியில் பல்துலக்கி வர முக வசீகரம் உண்டாகும். மேலும் பல்வலி, பல்கூச்சம், பல்ஈறுகளில் ரத்தம் வடிதல், ஈறுவீக்கம், ஈறுஅரிப்பு, பல் அசைவு, சொத்தைப்பல் போன்ற பற்களைப் பற்றிய அனைத்து வியாதிகளும் தீரும். மேலும் நாக்கில் உண்டாகும் புண், நாசியில் உண்டாகும் புண், தொண்டைப்புண் போன்றவையும் இப்பற் பொடியால் தீரும்.

ரத்த பேதி நீங்க…

மாதுளம்பூ, அத்தி, துத்தி, ஆவாரம்பூ, பிரண்டை, பொடுதலை, வில்வம், வில்வ ஓடு, மாதுளை ஓடு ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் அளவு சேர்த்து ஒன்றாக்கித் தூள் செய்துகொள்ளவும். இதனை ஐந்து கிராம் அளவு காலை மாலை இருவேளையும் சாப்பிட்டு வர, ரத்தபேதி மற்றும் ரத்த மூலம் குணமாகும். மேலும் ஆசனவாய்ப் பகுதியில் உண்டாகும். புண், அரிப்பு, தடிப்பு, வெடிப்பு போன்ற குறைபாடுகளும் முழுமையாய் நீங்கும்.

வாந்தியை நிறுத்த…

கர்ப்ப காலத்தில் உண்டாகும் வாந்தியை நிறுத்துவது அவ்வளவு சுலபமான காரியமல்ல. வாந்தியை நொடிப்பொழுதில் நிறுத்தும் சக்தி மாதுளைக்கு மட்டுமே உண்டு. சித்த மருத்துவ மருந்துக்கடைகளில் கிடைக்கும், “மாதுளை மணப்பாகு’ என்ற மருந்தினை வாங்கி, மணிக்கு ஒருமுறை கொடுத்து வாருங்கள். ஐந்தாறுமுறை கொடுத்தபின் வாந்தி வருவது நின்றுவிடும். கடைகளில் வாங்க இயலாதபட்சத்தில் இங்கே குறிப்பிட்டபடி உங்கள் வீட்டிலேயே செய்து கொள்ளலாம்.

மாதுளைச் சாறு, நெல்லிச் சாறு, ஆரஞ்சுச் சாறு ஆகியவற்றை வகைக்கு 100 மி.லி. எடுத்து ஒன்றாக்கி, 300 மி.லி. தேனுடன் கலந்து அடுப்பிலேற்றி சிறு தீயாய் எரிக்கவும் சாறுசுண்டி பாகுபதம் வரும்பொழுது எடுத்து பத்திரப்படுத்தவும். எளிய முறையில் செய்யப் படும் இம்மாதுளை மணப்பாகு கடுமையான வாந்தியை நிறுத்தும் வல்லமை கொண்டது.

விக்கலை நிறுத்த அற்புதமான வழி…

மதுப் பழக்கத்தினால் கல்லீரலைக் கெடுத் துக் கொண்ட அன்பர்களுக்கு, அவர்களையும் வாழ்விக்கும் பொருட்டு அரிய மருந்தொன்று சொல்கிறேன். தீவிர மதுப்பழக்கம் உடையோ ருக்கு, கல்லீரல் கெட்டு ரத்த மாறுபாடுகள் உண்டாகி விக்கல் நோய் உண்டாகும். விக்கல் நோயை முற்றாகக் குணப்படுத்தும் வல்லமை மாதுளைக்கு உண்டென்பதை அடித்துச் சொல்லலாம்.

மாதுளம் பிஞ்சு, மாதுளம்பூ, வறுத்த சீரகம், கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி, மஞ்சள் ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் எடுத்து ஒன்றாக்கித் தூள் செய்துகொள்ளவும். இதனை விக்கல் கண்டபோது தேனில் குழைத்து சாப்பிட விக்கல் உடனே நிற்கும். மேலும் அடிக்கடி விக்கல் நோயால் அவதிப்படு பவர்களும், குடியிலிருந்து மீள நினைக்கும் அன்பர்களும் இதனைத் தொடர்ந்து பயன் படுத்தலாம். கல்லீரல் சார்ந்த பிற நோய்களான கல்லீரல் வீக்கம் மற்றும் சுருக்கம், கல்லீரலில் உண்டாகும் புண், கட்டி, சீழ்க்கட்டி, பித்தப் பையில் உண்டாகும் புண், கட்டி, கற்கள் போன்றவற்றையும் அதிசயமாய் குணப் படுத்தும். இம்மருந்தினை, எம்பெருமான் ஈசனை சரணடைந்து சாப்பிடுங்கள்; சகலமும் பெறுவீர்கள்.

மன உளைச்சலுக்கு மாதுளையே மாமருந்து…

சமீபத்திய மேலைநாட்டு ஆய்வறிக்கை, “மாதுளம்பழச் சாறை மனநோயால் பாதிக் கப்பட்டவர்கள், ரத்த அழுத்த இதயநோயால் பாதிக்கப்பட்டவர்கள், தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து 30 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மிகச் சிறப்பான பலனைப் பெறலாம்’ என்று தெரிவிக்கிறது.

ஆண்மைக் குறைவு நீங்க…

மாதுளை ஓடு, ஜாதிக்காய், ஜாதிப்பத்திரி, அக்கிரகாரம், பூனைக்காலி விதைப்பருப்பு ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். இதனை காலை- மாலை இருவேளையும் ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வர, நீர்த்துப் போன சுக்கிலம் கட்டியாகி, போக உணர்வு விருப்பம் போல் நீடிக்கும்.

உயிரணுக்கள் பெருக…

மாதுளை ஓடு, நெருஞ்சில், கோரைக்கிழங்கு ஆகிய மூன்றையும் ஒன்றிரண்டாய் சிதைத்து, பசும் பாலில் போட்டு வேக வைத்துக் காய வைக்கவும். நன்கு காய்ந்தபின் நன்றாகத் தூள் செய்து கொள்ளவும். இதனை காலை- மதியம்- இரவு என மூன்று வேளையும் பாலில் கலந்து சாப்பிட்டு வர, உயிரணுக்கள் கோடிக் கணக்கில் பெருகும். வளமையான உயிரணுக்கள் வலுவான நிலையில் உண்டாகும். உங்கள் வீட்டில் ஈசன் அருளால், மழலைச்சத்தம் வெகுசீக்கிரமாய் கேட்கும். குறிப் பெடுத்துக் களைத்துவிடாமல், மருந்து செய்யும் வேலையை மகேசனை வேண்டி ஆரம்பியுங்கள்!

(தொடரும்)

ஆன்மிக கட்டுரைகள்

மன அமைதி தரும் மொக்கணீஸ்வரர்

எந்தப் பொருளைப் பார்த்தாலும் அதில் சிவத்தைக் கண்டால் அது சிவமாகவே மாறிவிடும் என்பதை நிரூபித்த சிவபெருமான், கோயம்புத்தூர் மாவட்டம் கூளே கவுண்டன்புதூரில் “மொக்கணீஸ்வரர்’ என்ற பெயரில் அருளுகிறார். இவரை வழிபட்டால் மனஅமைதி கிடைக்கும்
தல வரலாறு: சிவபக்தியில் தீவிர நாட்டம் கொண்ட வணிகர் ஒருவர், தினமும் சிவபெருமானை வழிபாடு செய்த பின்பே சாப்பிடும் பழக்கத்தை மேற்கொண்டிருந்தார். ஒருமுறை வியாபாரத்திற்காக, தனது மைத்துனருடன் குடக்கோட்டூர் வழியாக சென்றார். அப்போது வழிபாட்டுக்குரிய நேரம் வந்தது. அருகிலுள்ள ஓடையில் நீராடச் சென்றார். அப்போது அவரது மைத்துனர், குதிரைக்கு கொள்ளு வைக்கும் “மொக்கணி’ என்ற பையில், யதார்த்தமாக மண்ணை நிரப்பி ஒரு மரத்தடியில் புதைத்து வைத்தார். அதன் மீது மலர்களைத் தூவி சிவலிங்கம் போலத் தோன்றும்படி செய்தார்.
நீராடி வந்த வணிகர் “அருகில் சிவன் கோயில் உள்ளதா’? என மைத்துனரிடம் கேட்டார். அவர், கொள்ளுப் பையைக் காட்டி, “”இதோ! இங்கே இருக்கிறதே சிவலிங்கம்!” என்று கையைக் காட்டினார். வணிகரும் அதை சிவலிங்கமென்றே கருதி வழிபட்டார். பிறகு சாப்பிடத் துவங்கும் போது, மைத்துனர் இவரைப் பார்த்து, “”இன்று சிவதரிசனம் செய்யாமல்உண்ணத் துவங்குகின்றீரே,’ என்றார்.
“”இப்போது தானே சிவபெருமானை வணங்கினேன்,” என்றார் வணிகர். அதற்கு அவர் “”அது சிவலிங்கம் இல்லை,” என்று கைகொட்டிச் சிரித்து, மண்ணில் புதைத்து வைத்த கொள்ளுப்பையைத் (மொக்கணீயை) தூக்க முயன்றான். ஆனால், அது அசையவில்லை. எனவே சுற்றிலும் மண்ணைத் தோண்டி அதை எடுக்க முயன்றான். அப்போதும் அதை அசைக்க முடியவில்லை. அந்த “மொக்கணி’ லிங்கம் போல் மண்ணில் ஊடுருவிக் காட்சியளித்தது. பக்தன் எந்தப் பொருளை சிவவடிவாக பார்த்தாலும், அதில் சிவபெருமான் எழுந்தருளுவார்,” என்பது இதன் மூலம் உறுதிப்பட்டது. சிவபெருமானின் கருணையை எண்ணி வணிகரும், அவருடைய மைத்துனரும் உள்ளம் உருகி நின்றனர்.
மொக்கணி பையில் தோன்றிய அந்த சிவன் ” மொக்கணீஸ்வரர்’ என்ற திருப்பெயர் பெற்றார். இத்தலம் “மொக்கணீசுரம்’ எனப்பட்டது. பிற்காலத்தில் இந்தக்கோயில் அழிந்து போனது. திருவாசகத்தில் கீர்த்த திருத்தாண்டகத்தில் மாணிக்கவாசகர் “”மொக்கணீ அருளிய முழுத்தழல்மேனி சொக்கதாகக் காட்டிய தொன்மையும்” என இத்தலம் பற்றி பாடியிருந்ததை அடிப்படையாக வைத்து மீண்டும் இங்கு கோயில் எழுப்பப்பட்டது. 500 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலுக்கு கொங்கு நாட்டு சிற்றரசர் பாலைய தேவ மகாராசா என்ற வானராச உடையார் திருப்பணி செய்தார்.
சிறப்பம்சம்: சுந்தரரால் பாடல் பெற்ற தேவார வைப்புத்தலம். மூலஸ்தானம் முன்பு நின்று சுவாமி, அம்பாள் ஆகியோரை ஒரே நேரத்தில் தரிசிக்க முடியும். ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சிவசூரியன் தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறார்.
எமபயம் நீக்கும் அம்பிகை: மொக்கணீஸ்வரர் கிழக்கு பார்த்தும், அம்பாள் மீனாட்சி தெற்கு நோக்கியும் இருப்பதால் இந்த கோயில் பரிகார கோயிலாக உள்ளது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மீனாட்சி அம்மனுக்கு நெய் விளக்கு ஏற்றி, அரளிப்பூ மாலை சாத்தி வழிபட்டால் தீர்க்காயுளும் கிடைக்கும்.
திருமணத்தடை நீங்குவதுடன், குழந்தை பேறு, கல்வியில் மேம்பாடு, வேலைவாய்ப்பு கிடைத்தல், உடல் ஆரோக்கியம் குடும்ப பிரச்னைகள் தீர்தல் ஆகி நற்பலன்களும் கிடைக்கும். விவசாயம், கால்நடை செழிப்புக்கு மொக்கணீஸ்வரருக்கு சிறப்பு வழிபாடுகளை விவசாயிகள் செய்கின்றனர்.
மன அமைதிக்கு வழிபாடு: பிறரை நம்பி ஏமாந்தவர்கள், நம்பிக்கை துரோகத்திற்கு ஆளானவர்கள் இங்கு சிவனை மன அமைதிக்காக பிரார்த்திக்கலாம்.
கோயில் அமைப்பு: முன் மண்டபத்தில் மாணிக்கவாசர், பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர், பைரவர், நவக்கிரக சந்நிதிகள் உள்ளன. இத்தல விநாயகர், “மூத்த விநாயகர்’ எனப்படுகிறார்.
இருப்பிடம்: கோயம்புத்தூரிலிருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் 40 கி.மீ., தூரத்தில் புஞ்சை புளியம்பட்டி உள்ளது. அங்கிருந்து குட்டகம் வழியாக சேவூர் செல்லும் சாலையில் 9 கி.மீ., தூரத்தில் கூளேகவுண்டன்புதூர் உள்ளது. புளியம்பட்டியில் இருந்து பஸ்வசதி குறைவு என்பதால் கார்களில்செல்லலாம்.
திறக்கும் நேரம்: காலை 8- பகல் 12மணி, மாலை 5- 6.30 மணி
போன்: 98422-17796, 96777- 92328.

மந்திர விபூதி பெருமாள்

பக்தர்களை “வா’வென்று அழைத்து அருள்புரியும் சுந்தரராஜப் பெருமாள் மதுரை அருகிலுள்ள வேம்பத்தூரில் கோயில் கொண்டிருக்கிறார். சங்ககாலப் புலவர்கள் இப்பெருமாளை வழிபட்டு கவிபாடும் ஆற்றல் பெற்றனர். ஆவணி திருவோணத்தன்று இங்கு வருஷாபிஷேகம் நடக்கிறது.
தல வரலாறு: கவிகால ருத்ரர் என்ற புலவர் திருமால் பக்தராக விளங்கினார். பெருமாள் அவரது கனவில் தோன்றி, அடியெடுத்துக் கொடுத்து பாடும்படி அருள்புரிந்தார். புலவர் பெருமாளிடம், அவ்விடத்தில் தங்கும்படி வேண்டிக்கொண்டார். பெருமாளும் அங்கே தங்கினார். பாண்டிய மன்னன் ஜடாவர்ம குலசேகரன் கோயில் நிர்மாணித்தான். சுந்தரராஜப் பெருமாள் என்ற திருநாமம் சூட்டப்பட்டது. காலவெள்ளத்தில் கோயில் சிதிலமடைந்தது. பத்தாண்டுகளுக்கு முன் மீண்டும் கோயில் கட்டப்பட்டது.
கூப்பிட்டு அருள்பவர்: ஆகூய் வரதராக பெருமாள் கருவறையில் வீற்றிருக்கிறார். ” ஆகூய் வரதர்’ என்றால் “இடக்கையால் வா என்று அழைத்து வலக்கையால் அருள்பாலிப்பவர்’ என்று பொருள். இடதுகை விரல்களை வளைத்து, அருகில் நம்மை அழைத்து, வலக்கையால் அபய முத்திரை காட்டி அமர்ந்திருக்கிறார். மேல் இருகைகளும் சங்கு, சக்கரத்தைத் தாங்கி நிற்கின்றன. திருமகள் பெருமாளின் மார்பில் குடி கொண்டிருக்கிறாள். பூமிதேவியும்,
நீளாதேவியும் இருபுறத்திலும் உடன் காட்சி தருகின்றனர்.
விண்ணகரக் கோயில்: திருமாலுக்குரிய 108 திவ்யதேசங்களில் வைகுண்டத்தை இப்பூவுலகில் காணமுடியாது. ஆனால், வேம்பத்தூர் சுந்தரராஜப்பெருமாளைத் தரிசித்தால் வைகுண்டத்தில் இருக்கும் பெருமாளைத் தரிசித்த பலன் கிடைக்கும் என்பதால் இத்தலத்திற்கு “விண்ணகரம்’ என்றும் பெயருண்டு. கல்வெட்டுகளில் இத்தலம் புறவரி விண்ணகரம், ராஜேந்திர விண்ணகரம், ஸ்ரீவிஜய மாணிக்க விண்ணகரம் என்று குறிக்கப்பட்டுள்ளது.
மாலையில் மந்திரவிபூதி: இங்கு தினமும் சுதர்சன சக்கரத்தை விபூதியில் இட்டு விஷ்ணு சகஸ்ரநாமம், லட்சுமி ஸ்தோத்திரம், குபேர, தன்வந்திரி, சுதர்சன மந்திரங்களை ஜெபிக்கின்றனர். சாயந்தர பூஜை முடிந்ததும் இந்த விபூதி பிரசாதமாக வழங்கப்படுகிறது. நோய்நொடிகளைப் போக்கும் மருந்தாக இதனைப் பூசிக் கொள்கின்றனர். “அரியும் சிவனும் ஒன்றே’ என்ற அடிப்படையில் விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது என்கிறார்கள்.
வருஷாபிஷேகம்: ஓணம் பண்டிகையான செப்.9ல் திருமஞ்சனமும், வீதிபுறப்பாடும், 10ல் லட்சார்ச்சனையும், 11ல் ஊஞ்சல் உற்சவமும், திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது.
பூமியில் கிடைத்த பூவராகர்: இங்குள்ள பூவராகப்பெருமாள் திருப்பணிவேலையின் போது, பூமிக்கடியில் கிடைக்கப்பெற்றார். பூமாதேவியை மடியில் ஏந்திய இவரது திருமுகம் தேவியை நோக்கி உள்ளது. சர்க்கரைப் பொங்கலும், கோரைக்கிழங்கு நைவேத்யமும் ரேவதி நட்சத்திரத்தில் நைவேத்யம் செய்யப்படுகிறது. பக்தர்கள், இவரிடம் தங்கள் குறையை ஒரு தாளில் எழுதி விண்ணப்பிக்கின்றனர். கோரிக்கை நிறைவேறும் வரை அதைக் கோயிலில் பாதுகாக்கின்றனர். குறை நிவர்த்தியானதும், பூவராகருக்கு பூச்சொரிந்தோ(உதிரிப்பூக்களை கொட்டுவது), பூப்பந்தல் இட்டோ நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.
கல்வியருளும் ஹயக்ரீவர்: கல்விக்கடவுளான லட்சுமி ஹயக்ரீவர் தனி சந்நிதியில் வீற்றிருக்கிறார். சரஸ்வதிதேவியின் குருவான இவரை வழிபட்டால் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். இவருக்கு வியாழக்கிழமை தேன் அபிஷேகமும், ஏலக்காய் மாலை சாத்தி வழிபடுவதும் சிறப்பாகும். கல்வியில் முன்னேற்றம் பெற நெய்தீபம் ஏற்றி 12 முறை வலம் வந்து வணங்குகின்றனர். பக்த ஆஞ்சநேயர், சுந்தரராஜ விநாயகர், பதினெட்டாம்படி கருப்பண்ணசுவாமி ஆகியோரும் வீற்றிருக்கின்றனர். கருடாழ்வார் கைகூப்பிய படி மூலவர் எதிரே காட்சிதருகிறார்.
நம்பர் விநாயகர்: மன்னர் ஒருவர், 2008 அந்தணர்களுக்கு தானம் செய்ய ஏற்பாடு செய்தபோது, 2007 அந்தணர்களே இவ்வூரில் இருந்தனர். அந்த எண்ணிக்கையைப் பூர்த்தி செய்ய புதிதாக அந்தணர் ஒருவர் வந்தார். தானம் வாங்கிய அவர், குளக்கரைக்குச் சென்று மறைந்தார். அதன் அடிப்படையில் அரசமரத்து விநாயகரோடு, இன்னொரு விநாயகரையும் பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினர். இவரை “இரண்டாயிரத்தெண் விநாயகர்’ என்று அழைக்கின்றனர். இரண்டாயிரத்தெண் என்பதற்கு இரண்டாயிரத்து எட்டு என்பது பொருளாகும். இவரை நீரில் மூழ்கடித்து வருணஜெபம் செய்தால் மழை பெய்யும் என்பது ஐதீகம்.
திருவிழா: ஆவணி திருவோணம், புரட்டாசி கடைசி சனி, திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி.
திறக்கும்நேரம்: காலை6- 11மணி, மாலை5 – இரவு 8 மணி.
இருப்பிடம்: மதுரை- ராமேஸ்வரம் சாலையில் திருப்பாச்சேத்தி சந்திப்பில் இருந்து 8கி.மீ.,
போன்: 97903 25083.

பிரச்னைகள் தீர்க்கும் பரிகாரங்கள்

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update

அரசு வேலை கிடைக்குமா? திருமணம் எப்போது கைகூடும்? என்னை தவறான வழியில் திருமணம் செய்ய சிலர் முயற்சிக்கிறார்கள். வழி கூறுங்கள்.
& சந்தோஷ்ப்ரியா, பரமத்தி.குரு பகவான் நீசம் பெற்று பாக்ய ஸ்தானத்தில் அமர்ந்து விட்டதாலும், சூரியன் பலம் குன்றியதாலும், ஏழில் கேதுவும் இருப்பதால் வயது கடந்த திருமணமே உங்களுக்கு நல்லது. கேதுவும் செவ்வாயும் பாதைமாறி நடக்க தூண்டுவார்கள். ஜாக்கிரதை தேவை.
பள்ளியில் பணிபுரியும் உங்களுக்கு நிச்சயம் நல்லதே நடக்கும். என்கடன் பணி செய்து கிடப்பதே என ஓய்வின்றி உழைப்பீர்கள். பெரும் யோகக் காலம் திருமணத்திற்குப் பிறகு நிச்சயம் உண்டு. சரும நோய்கள் அண்டாமல், உடலை பேணுவது நல்லது. வேலூருக்கு அருகில் சேண்பாக்கம் என்கிற ஊரில் லிங்க வடிவங்களில் அமைந்த 11 விநாயகர்கள் ஓங்கார வடிவில் இருக்கின்றனர். அங்கு சென்று வழிபாடு நடத்துங்கள். கீழே உள்ள மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள்.
மங்களம் திசதுமே விநாயக:
ஓம் கம் கணபதயே நம:
என் தாயாரின் ஆயுள் பாவம் எப்படி உள்ளது என்பதையும் நோய் நொடி இல்லாமல் இருப்பார்களா என்பதையும் செய்ய வேண்டிய பரிகாரங்களையும் கூறுங்கள்.
& ஓர் வாசகி, திருவண்ணாமலை.

உங்கள் தாயாருக்கு மறுபிறப்பு கிடையாது. ஏனெனில் கேது நல்ல நிலையில் உள்ளான். நீண்ட ஆயுளும் உண்டு. அதனால் பயமில்லை. 80 வயது நெருங்கும்போது உடம்பு சற்று படுத்தும். வியாழன் அன்று ஒரு வேளை மட்டும் பலகாரம் சாப்பிட்டு, உடல்நிலையை பொறுத்து, முடிந்தால், விரதம் இருக்கச் சொல்லுங்கள். குரு பலம் அதிகமாக உள்ளவருக்கு எப்போதும் கவலை வேண்டாம். ரமண பகவான் படத்தை அலங்கரித்து வைத்துக் கொண்டு தினசரி 108 முறை கீழ்க்காணும் மந்திரத்தைச் சொல்லுங்கள்.
‘‘ஸத்குரோ பாஹிமாம் பரமதயாளோ
பாஹிமாம்’’
இந்தப் பதிகத்தை வியாழனன்று 12
முறை படிக்கச் சொல்லுங்கள்:
மதிநுதல் மங்கையோடு வடஆல் இருந்து
மறை ஓதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை முடிமேல்
அணிந்து
என் உளமே புகுந்த அதனால்
கொதி உறுகாலன் அங்கி நமனோடு
தூதர்
கொடுநோய்கள் ஆன பலவும்
அதிகுணம் நல்ல நல்ல
அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
எனக்கு விரைவில் குழந்தை பிறக்கப் போகிறது. ஆண், பெண் என்ன குழந்தை பிறந்தாலும் என்ன பெயர் வைக்கலாம் என்று சொல்லுங்கள்.
& கே.இளவரசி, தஞ்சை.
குழந்தை பிறந்த பிறகு என்ன பெயர் வைப்பது என்று யோசிப்பது நல்லதம்மா. ஜோதிட வல்லுநர்களை அணுகி பெயரைச் சூட்டுங்கள். திருச்சி உத்தமர் கோயில் ஆலயத்திலேயே பெயர் சூட்டுவிழா நடத்தி அனைவருக்கும் உணவு கொடுங்கள். சிறப்பாக பூஜை நடத்துங்கள். ஆலயத்தில் அமர்ந்து வாரிசு கொடுத்த இறைவனை நினைத்து கீழ்க்காணும் பதிகத்தை எவ்வளவு முறை முடியுமோ பாடுங்கள். மேலும்
மயிலாடுதுறை பொறையாரிலிருந்து 3 கி.மீ. தொலைவிலுள்ள நல்லாடை அக்னீஸ்வரர் ஆலயத்திற்கு ஒருமுறை குழந்தையோடு சென்று வாருங்கள்.
நின்று தென்னத் தொவ்வோர் அணுவும்
நின்றன்சோதி நிறைந்ததுவாகி நன்று
வாழ்ந்திடச்
செய்பவை ஐயா! ஞாயிற்றின்கண்
ஒளிதருந்தேவா!
மன்னு வானிடைக்கொண்டு
உலகெல்லாம் வாழ நோக்கிடும்
வள்ளியதேவா!
கடந்த மூன்று வருடங்களாக கடும் சிரமங்களுக்கிடையே வாழ்ந்து வருகிறேன். கடன்கள் அதிகமாக உள்ளன. நகைகள் அனைத்தும் வங்கியில் உள்ளன. லட்சுமி கடாட்சம் கிடைக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
& ஆர்.சாவித்ரி,
நீலம்பூர்.
வீடுகளில் நம்மைச் சுற்றி எப்பொழுதும் ஒரு தேவதை வந்து கொண்டே இருக்கிறது. நாம் எதைப் பேசினாலும் அப்படியே ஆகட்டும் என்று அந்த தேவதை சொல்லிக்கொண்டே இருக்குமாம். அதனால் வீடுகளில், ‘இல்லை’ என்ற வார்த்தையையும் கடுஞ் சொற்களையும் பேசவே கூடாது. முடிந்தால் தேவி உபாசகரை வைத்து தேவி மாகாத்மியம் 4வது அத்தியாயம் முழுவதும் 108 முறை ஒன்பது நாட்கள் தொடர்ந்து படியுங்கள். சமஸ்கிருதம் தெரிந்தோரிடம் ஒருமுறை கற்று பிறகு படிப்பது நல்லது.
ஹ்ரீம் கார & ச்ரீம்கார & மந்த்ரான் & விதானாம்
முதா & வ்ருஷ்டி துல்யம் & தனம் & வர்ஷயந்தீம்
ஷடர்ணான் & விதானாம் & நதீன் ப்ரேஷயந்தீம்
பஜே ஸ்வர்ணதாராம் ஸதாவர்ஷயந்தீம்!
பி.எஸ்.சி. கணிதம் முடித்து விட்டு அரசு பணிக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். என் மனது எதையாவது சிந்தித்துக் கொண்டே இருக்கிறது. தூங்கும்போது கனவுகள் அதிகமாக வருகின்றன. எந்த செயலில் ஈடுபட்டாலும் தோல்விதான் மிஞ்சுகிறது. எல்லா குழப்பங்களும் நீங்கி, வெற்றி பெறவும் குடும்பத்தோடு சந்தோஷமாக இருக்கவும் என்ன செய்ய வேண்டும்?
&மகேஸ்வரி.
நீங்கள் மத்திம வயதில் நல்ல ஏற்றம் பெறுவீர்கள். புதிது புதிதாக சாதனைகள் செய்ய மனது துடிக்கும். நடவாததை எல்லாம் மனம் நினைப்பதாலேயே தூங்கும்போது கனவுகளாக அது வெளிப்படுகிறது. வயிறு ஜீரணிக்க முடியாததை இரவில் சாப்பிடாதீர்கள். நீங்கள் வழிபடவேண்டிய கடவுள் திருமுருகன். ஞாயிற்றுக் கிழமையன்று புதிய காரியம் எதையும் தொடங்காதீர்கள். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுங்கள். வயதானவர்களுக்கு செருப்பு, குடை போன்றவற்றை தானமாகக் கொடுங்கள். புத பகவானை ஆங்கிலத் தேதி 5 அன்றும் புதன் கிழமையில் காலை 6&7 அல்லது இரவு 8&9 மணியில் கீழ்க்காணும் பாடலை 23 முறை பக்தியோடு பாடி வணங்குங்கள்!
மதனநூல் முதலாவுள்ள மறை புகழ் கல்வி
ஞானம்
விதமுடன் அவரவர்க்கு விஞ்சைகள் அருளோன்
திங்கள்
சுதன் பல சுபா சுபங்கள் சுகம் பல கொடுக்க
வல்லன்
புதன் களப்புலவன் சீர்கால்
பொன்னடி போற்றி! போற்றி!
எனக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களில் ஒருவனுக்கு திருமணம் ஆகிவிட்டது. இன்னொருவன் படித்துக் கொண்டிருக்கிறான். ஆன்மிக யாத்திரைக்கு
செல்லலாம் என்று அடிக்கடி தோன்றுகிறது. மேலும் எங்கள் வருங்காலம் எப்படி இருக்கும்?
& வி.ராஜகோபால்.
இந்த அறுபத்தைந்து வயது வரையிலும் வாதத் திறமையும், உயர்ந்த பதவி, கௌரவம், தெய்வ பக்தி, சுகபோகங்கள், கெட்ட எண்ணம் கூட இல்லாது வாழ்ந்து வந்துள்ளீர்கள். தாமரை இலையில் விழுந்த நீர்போல நீங்கள் இனி எதிலும் ஒட்டாது வாழ்ந்து வர வேண்டும். இறைவனின் நாமத்தை அதிகம் சொல்லுங்கள். மனம் இறைவழிபாட்டை நோக்கியே இருக்கட்டும். நீங்கள் போக நினைக்கும் காசி யாத்திரையை உடனே நிறைவேற்றுங்கள். இறைவன் உங்களுக்காக காத்துள்ளான். கீழே கொடுக்கப்பட்டுள்ள பெருமாள் திருமொழி பாசுரத்தை தினமும் 16 முறை பாராயணம் செய்யுங்கள்.
தருதுயரம் தடாயேலுன் சரண் அல்லால் சரண் இல்லை
விரை குழவு மலர்ப் பொழில் சூழ்விற்றுவக்கோட்டம்மானே
அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன்
அருள்நினைந்தே யழும் குழவி அதுவே போன்று இருந்தேனே.
குல தெய்வ கோயில் கட்ட முயற்சித்து வருகிறோம். ஆனால், வேலை தொடங்கும்போது ஏதேனும் ஒரு தடை வந்து கொண்டேயிருக்கிறது.
& பி.கவிதா,
திருப்பத்தூர்.
இறைவனின் திருப்பணியை ஆரம்பிக்க வேண்டியதுதான் நம் பொறுப்பு. பின்பு அவரே ஆலயத்தை நிறைவு செய்து கொள்வார். இறைவனை நினைத்துக் கொண்டே செயல்பட்டால் ஆற்றில் மிதந்து போகும் பொருள்போல தானாகவே திருப்பணி நடந்தேறிவிடும். அனுமனின் படத்தை அலங்கரித்து கீழேயுள்ள பாடலை தினமும் 21 முறை பாடுங்கள். அவரருளால் எல்லாம் நல்லபடியாக நிகழ்ந்தேறும்.
நினைத்ததை நினைத்தவாறே நிகழ்த்திடும்
காற்றின் செல்வா, தஞ்சமென்றடைந்தேன்
எம்மைத் தாங்கியே காத்தல் வேண்டும்
மனத்துயர் மாற்றி இன்பம் வழங்கிடும்
கவியே! ஏழை இனத்துயர் மிகுந்து வாழும்
எம்மிடி தீர இன்னே
அனைத்து நற்செல்வம் நல்கி
அன்புடன் காப்பாய் போற்றி!
என் குடும்பத்தில் நிறைய பிரச்னைகள் உள்ளன. படுத்தால் தூக்கமே வரவில்லை. நான் சொல்லும் விஷயத்தையும் யாரும் காது கொடுத்தும் கேட்க மாட்டேன் என்கிறார்கள். என்ன செய்வது?
& கே.எஸ்.திருவேங்கடம், வேலூர்.
இந்த 72 வயதில் பிள்ளைகளிடம் இவ்வளவு பற்றும் பாசமும் எதற்கு? அவரவர் கருத்து தெரிந்து குடும்பத்தோடு வாழ்கிறார்கள். அவர்கள் செய்வது தவறு என்றால் சுட்டிகாட்டி விட்டு அமைதியாக இருங்கள். அதையே நினைத்துக் கொண்டிருக்காதீர்கள். இந்த வயதிலும் குடும்பம் குடும்பம் என்று அதிலேயே வீழ்ந்து கிடக்காதீர்கள். இறைவனின் நாமத்தை நீங்கள் மனதிற்குள்ளே இடையறாது சொல்லிக் கொண்டே இருங்கள். இதனால் உங்கள் பிள்ளைகளின் பிரச்னைகளுக்கும் எளிதில் தீர்வு கிட்டும். ‘‘காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்’’ என்றொரு பழமொழி உண்டு. இதற்கு மூச்சுக்காற்று உள்ள போதே சிவனை நினை எனவும் பொருள் உண்டு. உங்களால் முடிந்தால் சீர்காழிக்கு அருகேயுள்ள பனங்காட்டாங்குடி எனும் தலத்தில் அருளும் விஸ்வநாதர், விசாலாட்சியை தரிசியுங்கள். இங்கு சனீஸ்வர பகவான், வருணலிங்கம் இரண்டும் விசேஷமாகும். ஐப்பசி பௌர்ணமி அன்று சிறப்பு பூஜைகள், விழாக்கள் நடத்துவர். கீழ்க்காணும் துதியை தினமும் 18 முறை சொல்லுங்கள்.
சங்கடம் தீர்க்கும் சனி பகவானே!
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்!
சச்சரவின்றி சனீஸ்வர தேவே!
இச்சகம் வாழ இன்னருள் தாராய்!

பிற மதங்கள்

உனக்கு நீயே தலைவனாக இரு! உணர்ச்சியூட்டுகிறார் புத்தர்

எல்லா உயிர்களிடமும் அன்புடன் நேசக்கரம் நீட்டுங்கள். ஒழுக்கம் என்னும் உயர்ந்த பாறை மீது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். மெய்யறிவினால் மனதில் உண்டாகும் மயக்கத்தையும், அறியாமையையும் போக்குங்கள். கூரை செம்மையாக வேயப்பட்டிருந்தால் வீட்டிற்குள் மழைநீர் இறங்காதது போல, நன்னடத்தையும், நன்னெறிப் பயிற்சியும் கொண்ட மனத்தில் ஆசைகளுக்குச் சிறிதும் இடம் இருக்காது.   ஒருவன் ஆயிரம் படைகளை கூட வெற்றி கொள்ளலாம். அது மட்டுமே வீரமல்ல. எவனொருவன் தன்னைத் தானே அடக்கக் கற்றுக் கொள்கிறானே அவனே வெற்றி வீரர்களில் முதன்மையானவன்.  நாம் ஒவ்வொருவரும் தனக்குத் தானே தலைவனாக இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். நீயே உனக்கு தலைவனாக முடியா விட்டால் வேறு யார் தலைவனாக இருக்க முடியும்? மன அடக்கம் கைவரப்பெற்றவன் தலைமைப் பொறுப்பை ஏற்கும் தகுதி பெறுகிறான்.
மனிதன் தீய எண்ணத்தோடு பேசினாலும், செயல் புரிந்தாலும் வண்டிச்சக்கரம் மாடு செல்லும் திசையை நோக்கிச் செல்வது போல, துன்பம் அவனைத் தொடர்ந்து கொண்டே இருக்கும். நிலையில்லாத மனம் படைத்தவர்களும், உண்மையான அறத்தை அறியாதவர்களும், மனதில் அமைதியற்று குழம்பிக் கொண்டிருப்பவர்களும் எக்காலத்திலும் ஞானத்தை அடைய முடியாது. உண்மையான ஞானம் நம்மிடம் தோன்றி விட்டால், மனம் பூரண விடுதலை அடைந்து விடும். அப்போது சொல்லும், செயலிலும் அமைதி தவழும்.  வயலில் களைகள் பயிருக்கு தீமை தருவது போல, மனிதர்களுக்கு ஆசையே எல்லாத் தீமைகளையும் உண்டாக்குகிறது.   எந்தக் காலத்திலும் பகைமையை பகைமையால் தணிக்க முடியாது. பகைமை அன்பால் மட்டுமே போக்க முடியும்.  சோம்பித் திரியாதீர்கள். காமத்தோடு புலன் இன்பங்களை நாடாதீர்கள். ஆக்கமும், கேடும் தருகின்ற இருவழிகளை ஆராய்ந்து அறிவின் துணை கொண்டு ஆக்கம் தரும் பாதையில் நடை போடுங்கள்.
நியாயமான முறையில் செல்வத்தை சேர்த்து, அதனைக் கொண்டு இல்லாத ஏழைகளுக்கு தானம் செய்து வாழபவன் பெரும் புண்ணியங்களைத் தேடிக் கொள்கிறான்.  மனிதர்கள் தங்கள் நாக்கினைக் காத்துக் கொள்வது அவசியம். அப்போது எல்லா நன்மைகளும் தானாக வந்து சேரும்.  உங்கள் அறிவை நீங்களே தூண்டிக் கொள்ளுங்கள். உங்கள் நீங்களே பரிசோதனை செய்யுங்கள். இதனால், வாழ்வில் உண்டாகும் துன்பங்களைத் தடுத்துக் கொள்ளும் வலிமை உண்டாகும்.   எந்த ஒரு நதியானாலும் ஒருவனுடைய பாவத்தைக் கழுவ முடியாது. எந்த ஒரு சடங்கும் நம்மைத் தூய்மைப்படுத்தாது. தயவு, தருமசிந்தை, அமைதி போன்ற நல்லொழுக்கங்களே நம்மை ஈடேற்றும்.  உலகத்தின் மீது கொண்டுள்ள அளவு கடந்த பற்றை விடுங்கள். வாழ்க்கையில் ஒருவனுடைய செல்வமோ, அதிகாரமோ அவனை மேலும் மேலும் கீழ்நிலைக்குத் தள்ளிவிடுகின்றன.   “அவன் என்னை நிந்தித்தான், தாக்கினான், என் பொருளை அபகரித்தான்’ என்று எண்ணிக் கொண்டே இருந்தால், எந்நாளும் பகைமை தீர்வதில்லை. அத்தகைய எண்ணங்களுக்கு சிறிதும் இடம் தராதீர்கள். அவனிடம் அன்புகாட்டுங்கள். பகைமை மறைந்துவிடும்.